மேற்குறிப்பிடப்பட்டவை பொதுவான பலன்களே. சிலருக்கு அங்காரக யோகம் நல்ல பலன்களையும் அளிக்கக்கூடும். உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றம் ஏற்படலாம்.
அங்கார யோகத்தின் தாக்கத்தை குறைக்க செவ்வாய்க்கு உரிய தெய்வமான முருகப்பெருமானை வழிபடுவது, செவ்வாய்க்கிழமையும் சதுர்த்தி திதியும் சேரும் நாளில் விநாயகரை வழிபடுவது, நவக்கிரக சன்னதியில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு நிற மலர்கள் சாற்றி விளக்கேற்றி வழிபடுவது, செவ்வாய்க்கிழமைகளில் ஆடுகளுக்கு உணவளிப்பது, ஏழைகளுக்கு தானம் செய்வது, கோபத்தை கட்டுப்படுத்துவது மற்றும் தியானம் செய்வது ஆகியவற்றின் மூலம் அங்கார யோகத்தின் அசுப பலன்களைக் குறைக்கலாம்.
இந்த யோகம் முடிவடைந்த பிறகு, பல ராசிகளுக்கு நல்ல முன்னேற்றப் பாதையும், அதிர்ஷ்டமும் உண்டாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)