Panchgrahi Yoga 2026: சனி பகவான் வீட்டில் அமர்ந்த 5 கிரகங்கள்.! பஞ்சகிரக யோகத்தால் தொழிலிலும் வாழ்விலும் உச்சம் தொடப்போகும் 4 ராசிகள்.!

Published : Jan 19, 2026, 10:46 AM IST

Panchgrahi Rajyog Lucky Zodiac Signs: ஜனவரி மாத நடுப்பகுதியில் மகர ராசியில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது. ஐந்து கிரகங்களின் அபூர்வ சேர்க்கை சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்க இருக்கிறது. 

PREV
15
பஞ்சகிரக யோகம் 2026

ஜோதிட சாஸ்திரத்தின்படி, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் இணையும் போது, பல சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும். அப்படி ஒரு யோகம் தான் மகர ராசியில் உருவாகிறது. ஜனவரி 17 முதல் 19 வரை மகரத்தில் 5 கிரகங்கள் இணைவதால் பஞ்சகிரக யோகம் உருவாக இருக்கிறது.

பஞ்சகிரகம் யோகம் எப்போது உருவாகிறது?

மகர ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஏற்கனவே பயணித்து வருகின்றன. ஜனவரி 17-ல் புதனும், ஜனவரி 18-ல் சந்திரனும் மகர ராசிக்குள் நுழைவார்கள். இதனால் மகரத்தில் 5 கிரகங்கள் ஒன்றாக சேரும். இந்த நிலை ஜனவரி 21 வரை நீடிக்கும். இதன் காரணமாக உருவாகும் பஞ்சகிரக யோகம் சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை வழங்கவுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

25
ரிஷபம்

2026-ல் உருவாகும் முதல் பஞ்சகிரக யோகம் ரிஷப ராசியினரின் அதிர்ஷ்டத்தை இரட்டிப்பாக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கையால் ரிஷப ராசியினருக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் கணிசமான முன்னேற்றம் காணப்படும்.

35
கடகம்

மகரத்தில் உருவாகும் பஞ்சகிரக யோகம் கடக ராசிக்கு சுப பலன்களைத் தரும். இழந்த பணம் திரும்பக் கிடைக்கும். வங்கி இருப்பு கணிசமாக உயரும். நிதிப் பிரச்சனைகள் தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.

45
துலாம்

மகரத்தில் உருவாகும் பஞ்சகிரக யோகம் துலாம் ராசிக்கு மகத்தான நன்மைகளைத் தரும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குறைந்த ஊதியத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய சம்பளம் கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

55
மகரம்

மகர ராசியிலேயே பஞ்சகிரக யோகம் உருவாவதால், மகர ராசிக்காரர்களுக்கு பல சாதகமான நன்மைகள் கிடைக்கும். பணப் பிரச்சனைகள் தீரும். கடன் தொல்லையில் இருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும். முதலீடுகளில் இருந்து பெரும் லாபம் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories