இந்தப் பயிருக்கு ஐரோப்பிய நாடுகளில் பெரும்பான்மையான தேவை உள்ளது. பெரும்பாலான மருந்து நிறுவனம் கோல்சிசின் பெறுவதற்கு இந்தியாவிலிருந்து செங்காந்தள் கிழங்குகளை இறக்குமதி செய்கின்றன. இந்த சாகுபடியின் மூலம் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் நல்ல வருவாயும், நற்பெயரும் கிடைக்கின்றது.
குறைந்த முதலீடு அதிக வருமானம்
இவ்வாறு, குறைந்த முதலீட்டிலும், வறட்சியான நிலத்திலும் வளர்த்துக் கொள்ளக்கூடிய செங்காந்தள், விவசாயிகளுக்கு ஒரு புதிய வருமான வாயிலாகவும், மருத்துவ உலகுக்கு அரிய மூலப்பொருள்களையும் வழங்கும் சிறப்புப் பயிராக திகழ்கிறது. இயற்கை மருத்துவப் பயிர்களை வளர்த்து வளம் பெரும் சாத்தியத்தை உங்களும் சந்திக்கலாம்!