மத்திய அமைச்சர் வீட்டில் இளைஞர் சுட்டுக்கொலை! இவர் யார் தெரியுமா? மகனின் துப்பாக்கி சிக்கியது!

Published : Sep 01, 2023, 01:45 PM ISTUpdated : Sep 01, 2023, 01:48 PM IST
 மத்திய அமைச்சர் வீட்டில் இளைஞர் சுட்டுக்கொலை! இவர் யார் தெரியுமா? மகனின் துப்பாக்கி சிக்கியது!

சுருக்கம்

மத்திய அமைச்சரின் இல்லத்தில் இளைஞர் ஒருவர் அதிகாலையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் மத்திய அமைச்சர் கவுசல் கிஷோரின் இல்லத்தில் இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுசல் கிஷோர். இவரது வீடு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை அடுத்துள்ள பெகாரியா கிராமத்தில் உள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சரின் இல்லத்தில் இளைஞர் ஒருவர் அதிகாலையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர் அமைச்சரின் மகன் விகாஸ் கிஷோரின் நண்பரான வினய் ஸ்ரீவஸ்தவா என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வினய் ஸ்ரீவஸ்தவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் துப்பாக்கி மத்திய இணை அமைச்சர் கவுசல் கிஷோரின் மகனுக்கு சொந்தமானது எனத் தெரிய வந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!