இளம்பெண் கற்பழித்து கொன்ற வாலிபர்!! தலையில் கல்லைப்போட்டு துடிதுடிக்க பலாத்காரம்... சென்னையில் பயங்கரம்

By sathish kFirst Published Jan 17, 2019, 12:48 PM IST
Highlights

இளம் பெண்ணை கற்பழித்து  தலையில் கல்லைப்போட்டு  கொலை செய்துவிட்டு, அருகில் தூங்கிக்கிடந்த மகளையும் கொலை செய்த குடுகுடுப்புகாரனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஆவடி நரிக்குறவர் காலனியில் வசித்து வந்த நரிக்குறவர் ஒருவர், தனது 5 வயது மகனுடன் ஊர் ஊராக பாசிமணி, கம்மல் வியாபாரத்துக்கு சென்று விற்று வருகிறார்.  அவருடைய 22 வயது மனைவியும், 3 வயது மகளும் இருந்தனர். 
 
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆவடியில் உறவினர் வீட்டுக்கு வந்த வீரக்குமார், இரவு நேரங்களில் குடித்துவிட்டு தனியாக இருந்த பெண்ணிடம் அடிக்கடி  செக்ஸ் சில்மிஷம் செய்து வந்துள்ளார்.
 
இதனை அடுத்து அந்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாததை தெரிந்துகொண்ட வீரக்குமார், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தார். அங்கு தனது மகளுடன் அந்த பெண் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் சத்தம் போடாமல் இருக்க வீட்டுக்கு வெளியே இருந்த கல்லை எடுத்து வந்து அவரது தலையில் போட்டார். இதில் அந்த பெண், ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அப்போது உயிருக்கு போராடிய அந்த பெண்ணை  துடிக்க கற்பழித்துவிட்டு, கல்லை தூக்கி போட்ட போது அருகில் படுத்திருந்த அந்த பெண்ணின் மகள் முகத்திலும் விழுந்ததால் அந்த சிறுமி, அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து  வீரகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், தாய், மகள் இருவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தவாறு ஓடிச்சென்று ஆவடி காவல் நிலையத்துக்குள் புகுந்து அங்கு சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து வைத்து இருந்த வீரக்குமாரை  கவ்விப்பிடித்தது.  இதனையடுத்து வீரகுமாரிடம் அவரிடம் நடத்திய விசாரணையில் தாய், மகளை கொன்றதை ஒப்புக்கொண்டார்.  
 

click me!