ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 2வது கணவரை கொல்ல முயற்சி

By Velmurugan sFirst Published Feb 3, 2023, 6:16 PM IST
Highlights

கோடீஸ்வரரை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக இரண்டாவது கணவரின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரையும் கொலை செய்துவிட்டு சொத்துகளை அபகரிக்க முயன்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரை அடுத்த குறிச்சி தோட்டத்துப் பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 52) விவசாயி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்தார். அதன் பின்னர் அவர்கள் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தில் வசித்து வந்தனர். இவர்களுடன் சுப்பிரமணியின் தாயாரும் வசித்து வந்தார். 

அதன் பின்னர் தேவிக்கும், சுப்பிரமணியின் தாயாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சுப்பிரமணியின் தாயார் கோபித்துக்கொண்டு அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து தேவி, தனது கணவரிடம் "நாம் திண்டுக்கல் சென்று அங்கு சந்தோஷமாக வாழலாம்" என கூறியுள்ளார். ஆனால் அவர் செல்ல மறுத்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த 15-ம்தேதி சுப்பிரமணி காய்ச்சலால் அவதிப்பட்டார். அப்போது அவரது காலில் தேவி ஊசி ஒன்றை செலுத்தியுள்ளார். இதில் சுயநினைவை இழந்த சுப்பிரமணி திருப்பூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய ரத்தத்தில் பூச்சிமருந்து கலந்துள்ளதாக தெரிவித்தனர். 

தருமபுரியில் மாயமான பள்ளி மாணவின் உடல் எலும்பு கூடுகளாக மீட்பு

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து தப்பி தேவி தலைமறைவானார். இதையடுத்து விஷ ஊசி செலுத்தி தன்னை கொல்ல முயன்றதாக மனைவி மீது சுப்பிரமணி குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தேவியை வலைவீசி தேடி வந்தனர். அப்போது தேவி நாமக்கல்லில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், தேவி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் எனக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் நடந்துள் ளது. இந்த நிலையில்தான் விவசாயி சுப்பிரமணிக்கு 50 வயது ஆகியும் திருமணமாகவில்லை என்றும், அவருக்கு சொந்தமாக சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலம் இருப்பதும் புரோக்கர் மூலம் தெரியவந்தது. எனவே சுப்பிரமணியை 2-வதாக திருமணம் செய்தேன்.

குடிபோதையில் தகராறு செய்த கணவரை கத்தியால் வெட்டி கொலை செய்த மனைவி!! 

இதற்கிடையில், நாமக்கல்லைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்து இருப்பதும், அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க உறவினர்கள் பெண் பார்த்து வந்ததும் தெரிய வந்தது. எனவே அவரை திருமணம் செய்தால் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று முடிவு செய்தேன். அதற்கு முன்பு சுப்பிரமணியை கொலை செய்துவிட்டால் அவருடைய சொத்துகளும் மனைவி என்ற பந்தத்தில் நமக்கு கிடைக்கும் என்ற ஆசை வந்தது. எனவே சுப்பிரமணிக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயற்சித்தேன். 

அதன் பின்னர் போலீசார் பிடித்து விடுவார்கள் என பயந்து நாமக்கல்லுக்கு தப்பி சென்று 3-வதாக அந்த கோடீஸ்வரரை 27-ந் தேதி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தேன். இந்த நிலையில் காவல் துறையில் சிக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

click me!