புது மனைவியை ஆபாச வீடியோ பார்க்க சொல்லி டார்ச்சர்... அந்த இடங்களில் சிகரெட் சூடு.. கணவன் சைகோத்தனம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 21, 2022, 9:11 PM IST
Highlights

திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில் புது  மனைவியை ஆபாச படம் பார்க்கச் சொல்லி கணவன் டார்ச்சர் கொடுத்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. 

திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில் புது  மனைவியை ஆபாச படம் பார்க்கச் சொல்லி கணவன் டார்ச்சர் கொடுத்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மனைவி கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

திருமணம் ஆயிரம் காலத்து பயிர், அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என கூறப்படுவதுண்டு, ஆனால் சில பெண்களில்  திருமண வாழ்க்கை சைக்கோ கணவன்களால் நரகமாக மாறி விடுகிறது,  திருமணத்துக்குப் முன்னர் தங்களை புதிய கதாநாயகனைப் போல சித்தரிக்கும் கணவன்கள் போகப்போக வில்லன் முகத்தை காட்ட ஆரம்பிக்கின்றனர்,

மனைவிகளை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவது, முதலிரவு முடித்து விட்டு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என கூறுவது,. தனக்கு ஏற்ற ஜோடி நீ இல்லை எனக்கூறி சைக்கோ தனம் செய்வது, இயற்கைக்கு முரணான பாலியல் சித்திரவதைகள் செய்வது போன்ற எண்ணற்ற கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: மாணவியை கேபினுக்கு அழைத்துச் சென்று அந்தரங்க உறுப்பில் கை வைத்து வக்கிரம்.. வகையா சிக்கிய பிரின்ஸ்பல்..

இந்த வரிசையில் திருமணமாகி ஓராண்டே ஆன புது மனைவியை கணவன் பட்டப் பகலில் ஆபாச படம் பார்க்கச் சொல்லி ச*** டார்ச்சர் கொடுத்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- கர்நாடக மாநிலம் பெங்களூரு பானசாவடி சேர்ந்த இளைஞர் பிரதீப் (25) கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 22 வயது இளம் பெண்ணுடன் இவருக்கு திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த சில மாதங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது. அதன் பிறகு பிரதீப் தனது சைக்கோ முகத்தை காட்ட ஆரம்பித்தார், என்னேரமும் மனைவியை திட்டி தீர்ப்பது, காரணமில்லாமல் அட்த்து சித்திரவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். பகலில் குடித்துவிட்டு வந்து மனைவியை ஆபாச படம் பார்க்கச் சொல்லி டார்ச்சர் செய்து வந்துள்ளார்.

நள்ளிரவு வரை அன்றாடம் இப் பிரச்சனையில் ஈடுபட்டு வந்துள்ளார். மனைவி தன் சொல்படி கேட்காத பட்சத்தில் சிகரெட்டால் சூடு வைப்பது போன்ற கொடூரங்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். மது அருந்த பணம் கேட்டு சண்டை போடுவது, நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து அவர்களுக்கு சமைத்து தருமாறு தொல்லை கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த தந்தை.. நேரில் பார்த்த மகன்.. வெறியில் என்ன செய்தார் தெரியுமா?

இதுவரை மனைவிக்கு 5 முறை கருக்கலைப்பு செய்து துன்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் இந்த டார்ச்சர் தாங்க முடியாத மனைவி தனது கணவனின் அட்டூழியங்கள் குறித்து போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 

click me!