கணவனுக்கே தெரியாமல் பெட்ரூமில் கேமரா... முதலிரவை வீடியோவாக்கிய மனைவி... அடுத்து நடந்த அதிர்ச்சி..!

By Thiraviaraj RMFirst Published Aug 24, 2021, 6:38 PM IST
Highlights

இவர்கள் அந்த வீட்டிற்கு சென்று தங்குவதற்கு முன்பே அந்த வீட்டின் படுக்கை அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. இந்த கேமரா காட்சி மூலம் முதலிரவு காட்சிகள் அனைத்தும் அதில் காட்சிகளாக பதிவு செய்யப்பட்டிருந்தன. 

கேரள மாநிலம், கொச்சி  அருகே உள்ள கடவந்தறாவை சேர்ந்தவர் அப்துல் ஸத்தார். இவருக்கு திருமணம் செய்ய பெண் பார்க்கப்பட்டு வந்தது. இவருக்கு தரகர் ஒருவர் மூலமாக ஸாஜிதா என்கிற 30 வயது பெண் அறிமுகமாகி இருக்கிறார். 
 
இதனையடுத்து மணப்பெண்ணின் பெற்றோர் உம்மர் அவரின் மனைவி பாத்திமா ஆகியோர் அப்துல் ஸத்தாரிடம் பேசி திருமண ஏற்பாடுகள் நடந்திருக்கிறது. அப்துலுக்கும் ஸாஜிதாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி அன்று பெரியோர்களின் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கொவ்வல்பள்ளியில் புதுமண தம்பதியரை தங்க வைப்பதற்காக புதிதாக வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டது.

இவர்கள் அந்த வீட்டிற்கு சென்று தங்குவதற்கு முன்பே அந்த வீட்டின் படுக்கை அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. இந்த கேமரா மூலம் முதலிரவு காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதனை அடுத்து இக்பால் திடீரென்று அப்துல் ஸத்தாரை தொடர்பு கொண்டு இந்த வீடியோ பதிவுகளை காட்டி தான் கேட்கும் பணம் நகை தரவில்லை என்றால் இதனை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். என்ன செய்வதென்று திகைத்த அப்துல் ஸத்தார் தன்னிடம் இருந்த ரூ.3.75 லட்சம் பணம், ஏழரை சவரன் நகைகளை இக்பாலிடம் கொடுத்திருக்கிறார். இவை அனைத்தையும் கொடுத்த பின்பும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அப்துல் உடனடியாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
 
போலீசார் இதுகுறித்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அப்துல் ஸத்தாருக்கும், சாஜிதாவுக்கும் இடையே நடைபெற்றது போலி திருமணம் எனத் தெரிய வந்தது. அப்துல் ஸத்தாரிடம் இருந்து பணத்தை பறிப்பதற்காக ஸாஜிதா தன்னுடைய பெற்றோர் போல் அவர்களை நடிக்க சொல்லி இருக்கிறார். கடைசியில் ஸாஜிதா அவரது பெற்றோராக நடித்தவர்கள் மற்றும் இக்பால் ஆகிய நால்வரும் இணைந்து அப்துலை ஏமாற்றி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் நால்வரும் இணைந்து தான் இந்த திருமண நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். பின்னர் முதலிரவு நடக்கும் அறையில் ரகசிய கேமரா வைத்து காட்சிகளை பதிவு செய்து அதனை காட்டி அப்துல் ஸத்தாரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். 

click me!