விபரீதத்தை உணராது விளையாட்டு..! கொரோனா வதந்தி பரப்பிய வாலிபர்கள் அதிரடி கைது..!

By Manikandan S R SFirst Published Mar 21, 2020, 3:26 PM IST
Highlights

கொரோனா தொடர்பாக ஏராளமான வதந்திகளும் சமூக ஊடகங்களில் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வதந்தி பரப்புவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 271 பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நிலையில்  பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.  நாளை தேசிய சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதனிடையே கொரோனா தொடர்பாக ஏராளமான வதந்திகளும் சமூக ஊடகங்களில் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வதந்தி பரப்புவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த நிலையில் புதுகோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் கொரோனா நோய் குறித்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சில போலி தகவல்கள் வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பரவி இருக்கிறது. விராலிமலை அருகே இருக்கும் லஞ்சமேட்டைச் சேர்ந்த அழகர்சாமி(30) என்கிற நபர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக வாட்ஸ் அப் குழுக்களில் வீடியோ பரவி இருக்கிறது.

கொரோனா தாக்குதலை முன்பே உணர்த்திய சிவன்மலை ஆண்டவன்? உத்தரவு பெட்டியில் இருக்கும் பொருளால் பக்தர்கள் பரவசம்..!

அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அழகர் சாமி காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அழகர் சாமியுடன் பணிபுரியும் ஐயப்பன்(26), ராஜ்குமார்(21) என இரு வாலிபர்கள் கொரோனா பீதியை பரப்பியது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் அதிரடியாக கைது செய்த போலிசார் அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

உயிரை விட உரிமையே முக்கியம்..! ஊரடங்கு நாளிலும் தொடரப்போகும் ஷாகின்பாக் போராட்டம்..!

click me!