ஐயோ அம்மா என்னை காப்பாத்துங்க.. பட்டப்பகலில் வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!

By vinoth kumarFirst Published Nov 8, 2020, 2:02 PM IST
Highlights

திருச்சியில் பட்டப்பகலில் வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சியில் பட்டப்பகலில் வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் தென்னூர் வாமடம் பகுதியை சேர்ந்த சப்பாணியின் மனைவி செல்வி. இவர்களது மகன்கள் அரவிந்த்( 28), ராஜ்குமார்(25), விஜயன் என்கிற வாழைக்காய் விஜி (20), விக்னேஸ்வரன் (18). சப்பாணி ஏற்கனவே இறந்துவிட்டார். அரவிந்த் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளனர். விஜயன் என்கிற வாழைக்காய் விஜி வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றி வந்தார். அவர் மீது வழிப்பறி, திருட்டு தொடர்பான சிறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில், நேற்று மதியம் விஜயன் தனது வீட்டின் அருகே உள்ள ரேஷன் கடை அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இறங்கினார். அவர்களை பார்த்ததும் விஜயன் ஓட ஆரம்பித்தார். ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டியது. இதில், சம்பவ இடத்திலேயே விஜயன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

இந்த சம்பவம் நடந்த போது விஜயனின் தாயார் செல்வி ஓடிவந்து தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் வெட்டினார்கள். இதில் அவருக்கு கைகளில் லேசான காயம் ஏற்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!