அதிமுக அமைச்சர் வீடு அருகே பாடிபில்டர் வெட்டிக்கொலை... திருச்சியில் பதற்றம்..!

By vinoth kumarFirst Published Sep 24, 2019, 11:59 AM IST
Highlights

திருச்சியில் அமைச்சர் வளர்மதி வீடு அருகே, பாடி பில்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியில் அமைச்சர் வளர்மதி வீடு அருகே, பாடி பில்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருச்சி உறையூர் மேலமின்னப்பன் தெருவை சேர்ந்த செல்வராஜின் மகன் மணிகண்டன் (22). இவர் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் பழுதுபார்ப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் உடற்பயிற்சி கூடம் அமைத்து கொடுப்பதையும், உடற்பயிற்சி மேற்கொள்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவரை ‘ஜிம்’ மணிகண்டன் என அப்பகுதியினர் அழைப்பது உண்டு.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மணிகண்டன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார், அவரது உறவினர் புகழேந்தி ஆகிய 2 பேரும் வந்து, முன்விரோதம் காரணமாக மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது செந்தில்குமாரை மணிகண்டன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், புகழேந்தி ஆகியோர் அரிவாளால் மணிகண்டனை வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் படுகாயமடைந்து  ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிகண்டனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக செந்தில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள புகழேந்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கொலை நடந்த மின்னப்பன் மேலத்தெருவுக்கு அடுத்த தெருவான 3-வது தெருவில் தான் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி வசித்து வருகிறார்.  அமைச்சர் வீட்டு அருகே நடந்த இந்த கொலை சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!