99 பேருக்கு வாழ்க்கையே போச்சு...!! வாழ்நாள் தடை விதித்து டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 24, 2020, 5:51 PM IST
Highlights

இது குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்திருந்த டிஎன்பிஎஸ்சி சந்தேகத்துக்கிடமான அத்தனை பேரையும் சென்னைக்கு வரவழைத்து பல கட்டங்களாக விசாரணையை நடத்தியது .  

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு தேர்வு எழுத வாழ்நாள் தடை விதித்து டிஎன்பிசி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது . அவர்கள் அனைவரும்  முறைகேட்டில்  ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் டிஎன்பிசி இந்த அதிரடி  நடவடிக்கையை எடுத்துள்ளது .  அரசு பணியில் சேர்வதற்கு பல லட்சம் பேர் பல நாட்கள் உழைத்து படித்து  கடுமையாக போராடி வருகின்றனர்  .ஆனால்  சிலரோ குறுக்கு வழியில் தேர்வில் வெற்றி பெற்று வேலையில் சேர்ந்து விடுகின்றனர் ,  இது போன்ற குற்றங்கள்  உண்மையாக உழைக்கும் மாணவர்கள்  மத்தியில் போட்டித் தேர்வுகள் மீது  அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது .

 

இந்நிலையில் ,  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் , கீழக்கரை அருகே 2 மையங்களில் தேர்வு எழுதிய 99 பேர் முறைகேட்டில் ஈருபட்டிருப்பது தெரியவந்துள்ளது.   மேற்கண்ட இரண்டு மையங்களில் தேர்வெழுதிய 99 பேர் மட்டும்  அதிக மதிப்பெண்கள் எடுத்து  தேர்வானது சந்தேகத்தை ஏற்படுத்தியது,  முதல் 100 இடங்களில்  இங்கு  தேர்வெழுதிய  39 பேர் இடம் பெற்றுள்ளனர் .  இது குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்திருந்த டிஎன்பிஎஸ்சி சந்தேகத்துக்கிடமான அத்தனை பேரையும் சென்னைக்கு வரவழைத்து பல கட்டங்களாக விசாரணையை நடத்தியது .  அதில் அவர்களுக்கு தனி தேர்வும்  நடத்தப்பட்டது .  பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது .

 

பின்னர் அது தொடர்பாக நடந்த விசாரணையில்  ராமேஸ்வரம் ,  கீழக்கரை ஆகிய இரண்டு தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது ,  இந்த வழக்கில் ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி ,  மற்றும் கீழக்கரை தாசில்தார் வீரராஜா உள்ளிட்ட 12 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 99 பேரும்  இனி வழ்நாள் முழுக்க டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாது என வாழ்நாள் தடை விதித்தது தமிழ்நாடு அரசுபணியாளர்கள்  தேர்வாணையம் அதிரடியாக அறிவித்துள்ளது .  இதனால் 99 பேரின் எதிர்காளம் கேள்விக்குறியாகி உள்ளது,  எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த முறை நடந்த குரூப் 4 தேர்வு 20 லட்சம் பேர் எழுதினார்கள் மாநில அரசு பணிக்காக இவ்வளவு பேர் தேர்வு எழுதியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!