பள்ளி மாணவியுடன் தனிமையில் உல்லாசம்... நேரில் பார்த்த சிறுவனுக்கு இறுதியில் நேர்ந்த கொடூரம்..!

By vinoth kumarFirst Published Jun 14, 2020, 6:05 PM IST
Highlights

திருப்பூர் அருகே இளம் காதல் ஜோடிகள் உல்லாசமாக இருந்ததை பார்த்த சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளி மாணவி மற்றும் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் அருகே இளம் காதல் ஜோடிகள் உல்லாசமாக இருந்ததை பார்த்த சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளி மாணவி மற்றும் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள நடுப்பட்டி ஊராட்சி சொட்டகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (36). இவரது மனைவி சுமதி(32). இவர்கள் இருவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகன்கள் விக்னேஷ்(9), பவனேஷ்(8) ஆகியோர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 11-ம் தேதி காலை வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் இருந்த சிறுவர்கள் விக்னேசும், பவனேசும் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தனர். .அனால், திடீரென மாலையில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் பவனேசை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதனையடுத்து, சிறிது தூரத்தில் தண்ணீர் இல்லாத குளத்தில் காணாமல் போன சிறுவன் பவனேஷ் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர். 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் சிறுவன் கொலை வழக்கு தொடர்பாக அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுமி நடுப்பட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தாள். இதற்கிடையே நேற்று முன்தினம் சிறுமியின் காதலனான அதே ஊரை சேர்ந்த செல்வத்தின் மகன் அஜித்குமார்(21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அஜித்குமார் ஊத்துக்குளி அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று சிறுமியின் வீட்டில் காதலன் அஜித்குமார் இருந்து உள்ளார். சிறுமியும், அஜித்குமாரும் தனிமையில் உல்ாசமாக இருந்துள்ளார். அதை சிறுவன் பார்த்து விட்டதால் ஊரில் பெரியவர்களிடம் சொல்லி விடுவான் என்ற அச்சத்தில் காதல் ஜோடி அவனை கொலை பீர் பாட்டில் மற்றும் கற்களால் கொடூரமாக தாக்கில் கொலை செய்யப்பட்டு விசாரணையில் தெரியவந்தது. 8 வயது சிறுவனை காதல் ஜோடி கொடூரமாக கொலை செய்த சம்பவம் ஊத்துக்குளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!