மனைவியை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் எடுத்து சென்ற காதல் கணவர்.. புதருக்குள் நடந்த பயங்கரம்..!

By vinoth kumarFirst Published Jun 29, 2021, 4:59 PM IST
Highlights

மனைவியை கொலை செய்து விட்டு கொரோனாவால் உயிரிழந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியை கொலை செய்து விட்டு கொரோனாவால் உயிரிழந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் ஒரு பெண் உடல்  இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை பார்வையிட்டனர். ஆனால், அது ஆணா, பெண்ணா என்றே தெரியாத அளவுக்கு கருகி கிடந்தது. அங்கு கைப்பற்றப்பட்ட தலைமுடியைக் கொண்டு அதனை பெண் என உறுதிப்படுத்திய போலீசார், அந்தப் பகுதியில் மாயமான பெண்களின் விவரங்களை சேகரித்தனர்.

அப்போது, புங்கனூர் மண்டலத்தில் உள்ள ராமசாமுத்திரத்தைச் சேர்ந்த அலிபிரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த டெக்கி  புவனேஸ்வரி கடந்த 2 நாட்களுக்கு முன் மாயமானது தெரியவந்தது.அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது  புவனேஸ்வரியை அவரது கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி வீட்டில் கொலை செய்து உடலை  மருத்துவமனையின் வளாகத்தில் எரித்தது தெரியவந்தது. புவனேஸ்வரியை வீட்டில் வைத்து கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் எடுத்து வந்து அங்கு தீவைத்து எரித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்தனர். 

மேலும், புவனேஸ்வரியை காணவில்லை என்று உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் கணவர் ஸ்ரீகாந்துக்கு தெரியவந்ததையடுத்து ரெட்டி தனது மனைவி கொரோனா டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் அங்கு அவர் உயிரிழந்து விட்டதாகவும்  கூறியுள்ளார்.  கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் உடலை  கொடுக்கவில்லை என கூறி நாடகமாடி உள்ளார். போலீசார் விசாரணையில் ஸ்ரீகாந்த் ரெட்டி நாடகம் அம்பலமானது. இவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!