பள்ளி மாணவி மீது தீராத ஆசை! திருப்பதிக்கு கூப்பிட்டு போய் ஆசிரியர் செய்த காரியம்! கதறிய மாணவி! நடந்தது என்ன?

Published : Apr 04, 2023, 09:25 AM ISTUpdated : Apr 04, 2023, 09:32 AM IST
 பள்ளி மாணவி மீது தீராத ஆசை! திருப்பதிக்கு கூப்பிட்டு போய் ஆசிரியர் செய்த காரியம்! கதறிய மாணவி! நடந்தது என்ன?

சுருக்கம்

பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். உன்னை திருமணம் செய்து கொண்டு ராணி போல நன்றாக வைத்து பார்த்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். அவரது பேச்சில் மாணவியும் மயங்கினார்.

ஆசைவார்த்தை கூறி 12ம் வகுப்பு பள்ளி மாணவியை திருமணம் செய்து கொண்ட ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காவரம் மண்டல் பகுதியை சேர்ந்த சலபதி (33). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அதே பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். உன்னை திருமணம் செய்து கொண்டு ராணி போல நன்றாக வைத்து பார்த்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். அவரது பேச்சில் மாணவியும் மயங்கினார். 

இதையும் படிங்க;- ப்ளீஸ் என்ன விட்டுடுங்க.. கதறியும் விடாமல் ஓடும் காரில் விடிய விடிய இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..!

இந்நிலையில், பள்ளியில் நடந்த இறுதித் தேர்வு முடிந்ததும், அந்த மாணவியை திருப்பதி கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்கு கோவிலில் வைத்து தாலி கட்டியுள்ளார். திருமணம்  நடந்த ஒரே நாளில் சலபதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்து மாணவி அதிர்ச்சியடைந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும் தெரியவந்தது. 

இதையும் படிங்க;- நள்ளிரவில் முனங்கல் சத்தம்.. எட்டி பார்த்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இறுதியில் நடந்த பயங்கரம்..!

ஆசிரியர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதை அறிந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்  சலபதி மீது கங்காவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சலபதி மீது போக்சோ பிரிவுகளின் கீழ் கைது செய்து விசாரணைக்கு பிறகு சிறையில் அடைத்தனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி