திருமண செய்ய மறுத்த காதலி... தலையை துண்டு துண்டாக வெட்டிய காதலன்..!

By vinoth kumarFirst Published Oct 18, 2018, 10:39 AM IST
Highlights

திருமணம் செய்ய மறுத்ததால் காதலியின் தலையை காதலன் துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. மேலும் கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலனும் தற்கொலை முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்ய மறுத்ததால் காதலியின் தலையை காதலன் துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. மேலும் கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலனும் தற்கொலை முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கஜகஸ்தான் நாட்டை சேர்ந்தவர் ஷயங்கிஸ் 26, இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் மருத்துவ பட்டம் பெற்ற நஸிற்கே பெக்ழநோவா என்ற 21 வயது நிறைந்த இளம் பெண்மருத்துவரிடம் தன்னுடைய காதலை தெரிவித்துள்ளார். இதற்கு அவளும் ஒப்புக்கொண்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.  

நாளடையில் அவர்களின் பெற்றொருக்கு தெரிவந்ததால் பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பெண் பேகேனோவ் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த இந்த நபர் கத்தியால் தன்னுடைய காதலியின் தலையை வெட்டி இரண்டாக துண்டித்து வீசிவிட்டு சென்றுள்ளார். பின்னர் தான் பணிபுரியும் இடத்திற்கு திரும்பிய அவர் வயிற்றில் கத்தியால் குத்திகொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலை கண்டுபிடித்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் எங்கள் இருவரையும் ஒன்றாக புதைத்து விடுங்கள்' என பேகேனோவ் எழுதி வைத்துள்ளார். 

click me!