புதுச்சேரியில் பயங்கரம்; கார் ஓட்டுநரின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற குடிபோதை ஆசாமிகள்!!

Published : Aug 19, 2023, 02:31 PM IST
புதுச்சேரியில் பயங்கரம்; கார் ஓட்டுநரின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற குடிபோதை ஆசாமிகள்!!

சுருக்கம்

புதுச்சேரியில் பணி முடிந்து வீட்டுக் சென்று கொண்டு இருந்த கார் ஓட்டுநரின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அரியூர் பகுதி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று தலை நசுக்கப்பட்ட நிலையில் கிடந்ததுள்ளது. இதுகுறித்து, வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுகாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில், புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை சேர்ந்த கார் ஓட்டுனர் சண்முகசுந்தரம் (48) என்பது தெரிய வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால் இவர் தற்காலிகமாக கண்டமங்கலம் அருகே உள்ள புதுச்சேரி பகுதியான அரியூரில் தனது மனைவி மற்றும் மகன் உடன் வசித்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு பணி முடிந்து பேருந்தில் வந்துள்ளார். அப்போது நிறுத்தத்தில் இறங்கியவரை மது போதையில் இருந்த வாலிபர்கள் தலையில்  கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஒடியதாக  விசாரணையில் தெரியவந்துள்ளது.

தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா.. இளைஞரின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த தம்பதி..!

மேலும் தப்பி ஓடிய வாலிபர்களை கைது செய்ய வில்லியனூர் போலீசார் தேடி வருகின்றனர்.

மருமகளை மடக்க நினைத்த மாமனார்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா போதும்! உனக்கு சொத்து பணம் தரம் சொல்லி டார்ச்சர்.!

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி