கண்ட இடத்தில் கை வைத்து டீச்சர் செய்த டார்ச்சர்.. மாணவன் என்ன செய்தான் தெரியுமா?

By vinoth kumarFirst Published May 4, 2023, 2:17 PM IST
Highlights

திருச்சி மாவட்டம்  துறையூர் அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி (43). துறையூரில்  அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது சித்திரப்பட்டி பகுதியில் தங்கி இருந்து டியூஷன் எடுத்து வருகிறார். 

டியூசன் வந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 

திருச்சி மாவட்டம்  துறையூர் அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி (43). துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது சித்திரப்பட்டி பகுதியில் தங்கி இருந்து டியூஷன் எடுத்து வருகிறார். 

இதையும் படிங்க;- என்கிட்ட சும்மா சிக்குனு அழகான பொண்ணுங்க இருக்கு வரியா! ரூ.500 இருந்தா போதும்! உல்லாசத்துக்கு அழைத்த புரோக்கர்

அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் ஆசிரியை தேவியிடம் டியூசன் சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதியன்று அந்த மாணவனுக்கு ஆசிரியை தேவி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவன் நடந்த சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  ஓடும் ரயிலில் நள்ளிரவில் அலறிய பெண்.. போதையில் கண்ட இடத்தில் கை வைத்து அத்துமீறிய CRPF வீரர்.. நடந்தது என்ன?

இதனையடுத்து, பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், ஆசிரியை தேவியை போக்சோ வழக்கில் கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.
 

click me!