போக்கிரி தனத்தை காட்டிய போலி சாமியார்.. படிக்க வைப்பதாக கூறி மாணவியை நாசம் செய்த கொடூரம்..!

By vinoth kumarFirst Published Jun 22, 2022, 12:30 PM IST
Highlights

சாமியாருக்கு மாணவியை எப்படியாவது அடைய வேண்டும் திட்டமிட்டுள்ளார். அவரை நன்றாக படிக்க வைப்பதாக கூறி வசியப்படுத்தி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

நன்றாக படிக்க வைப்பதாக கூறி பிளஸ்-2 மாணவியை வசியம் செய்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். சாமியாரான இவர் அதே பகுதியில் உள்ள கோவிலில் குறி சொல்லி பிழைப்பை நடத்தி வந்துள்ளார். இதனால்,  சாமியார் பிரசாந்த் காலபோக்கில் அப்பகுதியில் பிரபலமடைந்தார். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறி கேட்பதற்காக சாமியார் பிரசாந்திடம் சென்றுள்ளார். அப்போது மாணவியை நன்றாக படிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி வசியப்படுத்தியுள்ளார். இதனால் மாணவி அடிக்கடி பிரசாந்தை சந்தித்து வந்தார்.

இதையும் படிங்க;- வீட்ல வச்சு மசாஜ் செய்ய முடியாது.. சென்டருக்கு வர சொன்ன பெண்ணை வீடு புகுந்து கதறவிட்ட இளைஞர்கள்..!

ஆனால், சாமியாருக்கு மாணவியை எப்படியாவது அடைய வேண்டும் திட்டமிட்டுள்ளார். அவரை நன்றாக படிக்க வைப்பதாக கூறி வசியப்படுத்தி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என சாமியார் மாணவியை மிரட்டியுள்ளார். இதனிடையே, சாமியாரின் பாலியல் அத்துமீறல் நாளுக்கு நாள் எல்லை மீறியதால் வேறு வழியில்லாமல் நடந்தவற்றை கூறி மாணவி பெற்றோர்களிடம் கதறி அழுதுள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குற்றம் உறுதியானது. இதனையடுத்து, போக்சோவில் சாமியாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க;- ஒரே வீட்டில் தங்கி உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி.. நள்ளிரவில் வந்த கணவர்..அப்புறம் நடந்ததை மட்டும் பாருங்க

click me!