சிறுமியை சீரழித்து அடிக்கடி காம களியாட்டம் ஆடிய இளைஞர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!

By vinoth kumarFirst Published Jul 12, 2022, 8:42 AM IST
Highlights

கடந்த சில மாதங்களுக்கு முன் லூடோ செல்போன் ஆப் மூலம் அறிமுகமான செங்கல்பட்டை சேர்ந்த விக்கி(25) என்ற வாலிபருடன் சிறுமிக்கு நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

செல்போன் ஆப் மூலம் பழகி பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து பணம் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

சென்னை ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த சில மாதங்களுக்கு முன் லூடோ செல்போன் ஆப் மூலம் அறிமுகமான செங்கல்பட்டை சேர்ந்த விக்கி(25) என்ற வாலிபருடன் சிறுமிக்கு நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் சந்தித்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இதையும் படிங்க;- ஒரே நேரத்தில் 3 போலீஸ்காரர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்து அதிர்ந்து போன கணவர்.!

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த மாணவியை விக்கி ஆபாச வீடியோ எடுத்துள்ளார். தொடர்ந்து அந்த வீடியோவை காட்டி பள்ளி மாணவியை மிரட்டி விக்கி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் ஆபாச வீடியோவை ஒப்படைக்க ரூ.25 ஆயிரம் தரவேண்டும் என மாணவியின் பெற்றோரை மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதையும் படிங்க;- நைட்டு திருட வந்த இடத்தில் நைட்டி விலகிய நிலையில் தூங்கிய கல்லூரி மாணவி.. சல்லாபத்தில் பாய்ந்த சிறுவன்.!

அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்து வந்த விக்கியை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர், மாமண்டூரில் பதுங்கி இருந்தத அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். இதனையடுத்து,  ஆவடி காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், விக்கி இதேபோல் `பிளானட் ஆப் ரோமியோ’ என்ற ஆப் மூலம் ஓரினச்சேர்க்கையாளர்கள், பள்ளி மாணவிகள், இளைஞர்களை மிரட்டி பணம், செல்போன் பறித்ததும், இவர் மீது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்கியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க;- அம்மா என்ன நாலு பேரு சேர்ந்து நாசம் செஞ்சுட்டானுங்க.. 10ம் வகுப்பு பள்ளி மாணவியின் நண்பர்களே கூட்டு பலாத்காரம்

click me!