சிறுமியை 20 நாட்களாக கற்பழித்த கோயில் பூசாரி... மிட்டாய் வாங்கித் தர்றேன்னு சொல்லி சீரழித்த கொடுமை!!

By sathish kFirst Published Apr 29, 2019, 5:54 PM IST
Highlights

கோவையில் 4 ஆம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கோயில் பூசாரி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவையில் 4 ஆம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கோயில் பூசாரி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவையை அடுத்த கொண்டையம் பாளையம் கிராமம். அங்குள்ள மாரியம்மன் கோயில் பூசாரியாக இருப்பவர் தண்டபாணி. 61 வயதான அந்த பூசாரி மீது அந்தப் பகுதியில் மக்கள் நல்ல மரியாதை வைத்திருந்தனர். அப்படி தண்டபாணி மீது பக்தி கலந்த மரியாதை வைத்திருந்தவர்கள் அத்துனைபேரும் இந்த கொடூர சம்பவத்தால் அதிர்ந்துபோய் கிடக்கிறார்கள்.

20 நாள்களுக்கு முன் ஒரு நாள் மாலை, கோயிலின் அருகே விளையாடிக்கொண்டிருந்த  8 வயது பெண் குழந்தையை, மிட்டாய் வாங்கித் தர்றேன் என்று கூறி கோயிலின் உள்ளே கூப்பிட்டுக்கொண்டு போன அந்த பூசாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக தண்டபாணி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 20 நாள்களாகக் குழந்தைக்கு  இப்படிப்பட்ட ஒரு கொடூரம் நடந்தது போலவே தெரியாமல் இருந்துள்ளார்கள் குழந்தையின் பெற்றோர்கள். இந்நிலையில், குழந்தை திடீரென்று,  வலியால் துடித்த அந்த சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அப்போது அந்த சிறுமியை சோதித்த டாக்டர்கள் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின், பெற்றோர் இதுகுறித்து குழந்தையிடம் விசாரிக்கையில், அந்த சிறுமி சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.  

இதுகுறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் கோயில் பாளையம் போலீஸில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் விசாரித்துக் குற்றத்தை உறுதி செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து துடியலூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் விசாரித்து கோயில் பூசாரி தண்டபாணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

click me!