திருமணத்திற்கு முன்னே 2 பேருடன் தொடர்பு.. கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய காமவெறி பிடித்த மனைவி..!

By vinoth kumarFirst Published Aug 5, 2021, 1:52 PM IST
Highlights

 இரவு 10 மணிக்கு வேலை முடிந்து வந்த பிரபு சாப்பிட்டு தூங்கியதும் கள்ளக்காதலனை அழைத்து தலையணையால் முகத்தை அமுக்கி கொன்றுள்ளனர். திருடர்கள் கொன்றதுபோல காட்ட பிரபு அணிந்திருந்த தங்க சங்கிலியையும், மோதிரத்தையும் காமராஜ் எடுத்து சென்றுள்ளார். 

சேலத்தில் தலையாணையால் அழுத்தி கணவரை கொடூரமாக கொன்றுவிட்ட நாடகம் ஆடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.

சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் பிரபு (39). இவர் போலீஸ் ஸ்டேசன் அருகில் வாழை இலைக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஷாலினி (22). இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. கடந்த 2ம் தேதி நள்ளிரவு வீட்டில் மர்மமான முறையில் பிரபு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து, இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மனைவி முன்னுக்கு பின் முரணாக போலீசாரிடம் பதிலளித்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஷாலினியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. ஷாலினி பேஸ்புக்கில் அவருடன் தொடர்பில் இருந்த திருச்சி மாவட்டம் துறையூர் சிங்களாந்தபுரம் தெக்கியூரை சேர்ந்த காமராஜ் (23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. 

ஷாலினி கல்லூரியில் படிக்கும் போது இருவரை காதலித்துள்ளார். அதில் ஒருவர் செல்போன் வாங்கி கொடுக்கவே அவருடன் ஷாலினி வீட்டைவிட்டு ஓடிவிட்டார். பின்னர் பெற்றோர் அவரை தேடி அழைத்து வந்து தாய் மாமன் பிரபுவுக்கு திருமணம் செய்து வைத்தனர். இருவருக்கும் இடையே 17 வயது வித்தியாசம் இருந்தது. இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், எந்த நேரமும் பேஸ்புக், வாட்ஸ்அப்பில் ஷாலினி மூழ்கி கிடந்தார். இதில் பலருடன் பேசி பழகியுள்ளார். அப்போதுதான் துறையூர் வாலிபர் காமராஜிடன் தொடர்பு ஏற்பட்டது. பேஸ்புக்கில் பேசி வந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஷாலினியின் தாய் வீடு நாமக்கல்லில் உள்ளது. தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு, அவரை பார்க்க சென்று தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்காதலுக்க தடையாக இருந்த கணவனை போட்டு தள்ளிவிட்டு கள்ளக்காதலனுடன் வாழ முடிவு செய்தார். 

சம்பவத்தன்று கள்ளக்காதலனை வீட்டுக்கு வரழைத்த ஷாலினி, மொட்டை மாடியில் தண்ணீர் டேங்க் அருகில் பதுங்க வைத்துள்ளார்.  இரவு 10 மணிக்கு வேலை முடிந்து வந்த பிரபு சாப்பிட்டு தூங்கியதும் கள்ளக்காதலனை அழைத்து தலையணையால் முகத்தை அமுக்கி கொன்றுள்ளனர். திருடர்கள் கொன்றதுபோல காட்ட பிரபு அணிந்திருந்த தங்க சங்கிலியையும், மோதிரத்தையும் காமராஜ் எடுத்து சென்றுள்ளார். இதனையடுத்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

click me!