உயிரோடு இருந்தாலும் சந்தோஷமாக இருக்க முடியாது.. 2 கள்ளக்காதலனுடன் சேர்ந்து பஸ் கண்டக்டர் கொலை செய்த பெண்..!

By vinoth kumarFirst Published Jun 12, 2021, 6:17 PM IST
Highlights

உமா மகேஸ்வரிக்கு வேறு சில ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இதை அறிந்த சுப்பிரமணி உமாமகேஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணிய உயிரோடு இருந்தாலும் சந்தோஷமாக இருக்க முடியாது என்று நினைத்து தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

சேலத்தில் இரண்டு ஆண் நண்பருடன் சேர்ந்து கள்ளக்காதலி பஸ் கண்டக்டரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சேலம் மாவட்டம் மல்லமுப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி(49) தனியார் பஸ் கண்டக்டர். இவர் 28 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பா என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு 27 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து தளவாய்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். விழுப்புரத்தை சேர்ந்த சித்ரா இவர் சேலம் தளவாய்பட்டியில் தங்கி அங்குள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.  இவரது மகன் சர்வேஸ்வரி(33). இவருக்கு மேட்டூர் அருகே உள்ள வனவாசியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

 ஆனால் கணவரை பிரிந்து வந்த சர்வேஸ்வரி தாயாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சர்வேஸ்வரியுடன் சண்டக்டர் சுப்ரமணிக்கு பழக்கம் ஏற்பட்டது.  பின்னர் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர். இதனிடையே சர்வேஸ்வரியின் உமாமகேஸ்வரி(35) கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது 17 மகளுடன் தாயார் சித்ரா வீட்டில் வந்துவிட்டார். இந்நிலையில், சுப்பிரமணிக்கும், உமாமகேஸ்வரியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வேஸ்வரி தனது தாயார் வீட்டு வந்து விட்டார்.  இதையடுத்து,  உமா மகேஸ்வரியின் சுப்பிரமணியனும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு சுப்பிரமணி தனது வீட்டில் உள்ள கட்டிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில்,  சுப்பிரமணி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சுப்பிரமணிய வீட்டில் நேற்று இரவு 2 ஆண்களுடன் உமா மகேஸ்வரி வந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து உமாமகேஸ்வரி பிடித்து விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதில் உமாமகேஸ்வரிக்கு சுப்பிரமணியனிடம்  பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே, உமா மகேஸ்வரிக்கு வேறு சில ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இதை அறிந்த சுப்பிரமணி உமாமகேஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணிய உயிரோடு இருந்தாலும் சந்தோஷமாக இருக்க முடியாது என்று நினைத்து தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து, 2 ஆண் நண்பர்களுடன் அங்கிருந்து சென்றுவிட்டனர் என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!