தூக்கத்திலேயே வீடு புகுந்து துடிதுடிக்க ரவுடி கொடூரமாக படுகொலை.. போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்.!

By vinoth kumarFirst Published May 26, 2022, 2:46 PM IST
Highlights

புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சரத் (எ) பொடிமாஸ் (23). இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, வெடிகுண்டு வீச்சு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள்  நிலுவையில் உள்ளன. நாட்டு வெடிகுண்டுகளை தயாரிப்பதில் இவர் கைதேர்ந்தவர். 

புதுச்சேரி அரியாங்குளம் காவல் நிலையம் பின்புறம் ரவுடி பொடிமாஸ் என்ற சரத்தை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சரத் (எ) பொடிமாஸ் (23). இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, வெடிகுண்டு வீச்சு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள்  நிலுவையில் உள்ளன. நாட்டு வெடிகுண்டுகளை தயாரிப்பதில் இவர் கைதேர்ந்தவர். இந்நிலையில் நேற்று இரவு அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள தனது அக்கா வீட்டில் சரத் உறங்கிக் கொண்டிருந்தார்.

அவர் அங்கு உறங்கிக் கொண்டிருப்பதை தெரிந்து கொண்ட ஒரு கும்பல் இன்று அதிகாலையில் திடீரென வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றது. அங்கு உறங்கிக் கொண்டிருந்த சரத்தை சுற்றி வளைத்து அரிவாளால் கழுத்து, தலை பகுதியில் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரத் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை உறுதி செய்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் தெரிந்து வந்த அரியாங்குப்பம் போலீசார் சரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சரத்தை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!