உறவுக்கார அண்ணனோடு உல்லாசமாக இருந்த மனைவி... விருந்துக்கு போன இடத்தில் தகாத உறவால் விபரீதம்...

By sathish kFirst Published Jul 17, 2019, 5:10 PM IST
Highlights

கணவருடன் செல்ல மறுத்து உறவுக்கார அண்ணனுடன் இளம் பெண்  ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

உறவுக்கார அண்ணனோடு உல்லாசமாக இருந்த மனைவி...  விருந்துக்கு போன இடத்தில் தகாத உறவால் விபரீதம்... 

கணவருடன் செல்ல மறுத்து உறவுக்கார அண்ணனுடன் இளம் பெண்  ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுசீந்திரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ரமேஷ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மாலதி என்ற இளம்பெண்ணை ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருந்தது. காதல் திருமணம் செய்த வாலிபருடன் அவரது தங்கை சில மாதங்களாக பேசாமல் இருந்துள்ளார்.

சமீபத்தில் அவரது தங்கை, வாலிபரை சந்தித்து உறவை புதுப்பித்து கொண்டார். இதையடுத்து காதல் தம்பதியை தன் வீட்டிற்கு விருந்திற்கு வருமாறு அழைத்துள்ளார். தங்கையின் அழைப்பை ஏற்று வாலிபர் தன் மனைவியுடன் அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு அவர்கள் தங்கி விருந்துண்டு மகிழ்ந்தனர். அப்போது தங்கையின் கணவர், அந்த புது அவரது மனைவியுடன் அன்பாக பேசிக்கொண்டிருந்தார்.

உறவு முறையில் அவர்கள் அண்ணன்- தங்கை என்பதால் இதை யாரும் அவ்வளவு சீரியஸாக பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட இருவரும் எல்லை மீறிய பழக்கத்தில் ஈடுபட்டனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அடுத்து அந்த பெண்ணின் வீட்டிற்கு அன்னான் என்ற முறையில் அடிக்கடி சென்று உல்லாசம் அனுபவித்துவிட்டு வந்துள்ளார். அண்ணனை விருந்துக்கு அழைத்து, அவரது மனைவியுடன் தன் கணவருக்கு கள்ள தொடர்பு ஏற்பட்ட தகவல் அறிந்த அந்த பெண் அதிர்ந்து போனார். அவர் உடனே தன் குழந்தைகளுடன் கணவரை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டார்.

சகோதரியின் குடும்பம் சிதைந்ததுக்கு தன் மனைவி தான் காரணம் என்பதை அறிந்த வாலிபர், மனைவி மாலதியை கண்டித்தார். அனால் மாலதி கண்டுகொள்ளவே இல்லை, அவரது மனைவி பிரிந்ததை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட மாலதி கணவரை பிரிந்து,அண்ணன் உறவு முறை வாலிபருடன் சென்று அவருடனேயே உல்லாச வாழ்க்கை வாழ தொடங்கினார். இது பற்றி பெண்ணின் கணவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தன் மனைவி, அண்ணன் உறவு முறை வாலிபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு உள்ளார்.

அவர்களின் காதலுக்கு இடையூறாக இருப்பதால் எங்கள் குழந்தைகளை அவர்கள் துன்புறுத்துகிறார்கள் என்று கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்காக நேற்று மகளிர் போலீசார், கள்ளக் காதலர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று அவர்களை பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது அந்த பெண், தனக்கு காதல் கணவர் வேண்டாம். கள்ளக்காதலனே போதும் என்று கூறியுள்ளார் காதல் மனைவி மாலதி. போலீசார் எவ்வளவோ அட்வைஸ் பண்ணியும் கேட்க்காத மாலதி மற்றும் அன்னான் முறை கள்ளக்காதலனிடம் எழுதி வாங்கி கொண்டு அவர்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

click me!