இதனால் தான் நான் நாசமா போனேன்... சக கைதிகளிடம் குமுறிய அபிராமி!

By sathish kFirst Published Sep 6, 2018, 1:27 PM IST
Highlights

மியூசிக்கலியால் நாசமானேன்! சகக் கைதிகளிடம்  குமுறி அழுதுள்ளார் இரண்டுக் குழந்தைகளையும் கொன்ற அபிராமி. 

சமிபகாலமாக மியூசிக்கலில் தொடங்கி கணவன் மனைவி அந்தரங்க செயல்கள் வரை விடியோவாக பதிவிட்டு வருகின்றனர். இதனால் பல பெண்கள் வாழக்கை நடு தெருவுக்கு வந்துள்ளது. அதில் ஒருவர்தான் அபிராமி . கள்ளக் காதலுக்காக பெற்ற குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்று இப்போது ஜெயிலில் குமுறிக்கொண்டு இருக்கிறார் .

பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது இரண்டுக் குழந்தைகளையும்  பாலில் விஷம் கலந்து கொலை செய்துவிட்டு கேரளாவிற்கு தப்பித்துச் சென்ற அபிராமியைக் கைது செய்ய போரூர் உதவி ஆணையர் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை  அமைத்து நாகர் கோவிலில் கள்ளக்காதலனின் உதவியுடன் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட அபிராமியை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணைக்குப் பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில்,  கடந்த சில மாதங்களாக தனது கணவனை விட்டுவிட்டு பிரியாணிக்காரனிடம் தகாத உறவால் நாளுக்கு நாள் ஜாலியாக இருந்துள்ளார். கஷ்டமான நேரத்திலும் தனக்கு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்த கணவனையும் விட்டுவிட்டு பிரியாணிக் காரனுடன் உல்லாச வாழ்க்கைக்கு அடிமையானார் .

தினம் தினம் ஜாலியாக டப்ஸ்மேஷ்  வெளியிட்ட இந்த வீடியோவில் அபிராமி குஜாலாக கூத்தடித்துள்ளது வெளிப்பட்டுள்ளது. அதில், கையில் நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டு, பார்ப்பவர்களை கவரும் விதமாக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு,ஸ்டைலீஷாக நடித்துள்ளது வெளிப்பட்டுள்ளது. தினம் தினம் ஃபேஸ்புக் ஸ்டேட்ஸ், நாளுக்கு நாள் டப்ஸ்மேஷ் என ஒவ்வொன்றாக வெளியாகி வைரலாகி வருகிறது.  

சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து யாரிடமும் பேசாமல்,சாப்பிடாமல் இருந்த அபிராமி மெல்ல மெல்ல சிறையில் இருக்கும் சகக் கைதிகளிடம் பேச தொடங்கியுள்ளார். அப்போது இந்த  பாழாய் போன மியூசிக்கலியால் தாம் நான் நாசமானேன். நானும் சுந்தரமும் சேர்ந்தது மியூசிக்கலில்  தான் என்றும் குமுறியுள்ளார்.

click me!