சரக்கு வாங்கி கொடுக்காத நண்பனை போட்டுத் தள்ளிய கொடூரம்.. 17 வயது சிறுவன் செய்த பயங்கரம்..!

By vinoth kumarFirst Published Aug 1, 2022, 4:40 PM IST
Highlights

சென்னை சவுகார்பேட்டை ஆதியப்பன் நாயக்கன் தெருவை சேர்ந்த ரவி (35) என்பவர் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சென்னையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 17 வயது சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  

சென்னை சவுகார்பேட்டை ஆதியப்பன் நாயக்கன் தெருவை சேர்ந்த ரவி (35) என்பவர் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதையும் படிங்க;- வெளிநாடு சென்ற கணவன்! சைடு கேப்பில் மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்க முயன்ற கொடூர தாய்! வெளியான பகீர் சம்பவம்

விசாரணையில் அதே பகுதியில் நேற்று சவ ஊர்வலம் ஒன்றில் ரவி மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து நண்பர்கள் அனைவரும் இணைந்து மது அருந்துள்ளனர். அப்போது ரவியிடம் மீண்டும் மதுபானம் வாங்கித் தருமாறு நண்பர்கள் தகராறு செய்துள்ளனர். ஆனால், ரவி மதுபானம் வாங்கி கொடுக்கவில்லை. இதனால்  ஆத்திரமடைந்த காக்கா தீனா (23), திலீப் குமார் (21)  மற்றும் 17 வயதுது சிறுவன் கூட்டு சேர்ந்து ரவியை பலமாக தாக்கி கத்தி மற்றும் பாட்டிலால் ரவியின் தலையில் பலமாக தாக்கிவிட்டு  தப்பி ஓடியது தெரியவந்தது.

இதையும் படிங்க;- பட்டப்பகலில் புதுமாப்பிள்ளை ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!

பின்னர், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, காக்கா தீனா, திலீப் குமார் இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

click me!