மதுரையில் பயங்கரம்.. திருமணமான 2 நாட்களில் காதல் மனைவி கொடூரமாக எரித்து கொலை... கணவர் பகீர் வாக்குமூலம்.!

By vinoth kumarFirst Published Aug 8, 2021, 5:30 PM IST
Highlights

க்ளாடிஸ் ராணியிடம் நீ கர்ப்பமாகியதற்கு நான் தான் காரணம் என பொய் சொல்லி என்னை கட்டாய திருமணம் செய்தது ஏன் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். வாக்குவாதம்  முற்றவே ஆத்திரத்தில் ராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

திருமணமான இரண்டே நாட்களில் புதுப்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற காதல் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை மாவட்டம் சோழவந்தான் ராயபுரத்தை சேர்ந்தவர் க்ளாடிஸ் ராணி(21). அவனியாபுரம் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்த ஜோதிமணிக்கும்(23) நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையே காலமாக மாறியுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதனால், க்ளாடிஸ் ராணி 5 மாதம் கர்ப்பமானார். இந்த விஷயம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. 

இதையடுத்து, ஜோதிமணியை அழைத்து பெற்றோர் பேசியுள்ளனர். ஆனால், அவர் கர்ப்பத்திற்கு தான் காரணமில்லை கூறியதாக தெரிகிறது. பின்னர், நடந்த பேச்சுவார்த்தையில் ஜோதிமணியின் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2ம் தேதி ஜோதிமணிக்கும், க்ளாடிஸ் ராணிக்கும் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்ததும் இருவரும் கிளாடிஸ் ராணியின் வீட்டிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில் 4-ம் தேதி வெளியே சென்று வரலாம் என ஜோதிமணி க்ளாடிஸ் ராணியை அழைத்து சென்றுள்ளார்.

இருவரும் க்ளாடிஸ் ராணியின் பெற்றோர்களிடம் எதுவும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி சென்றுள்ளனர். இதனை அடுத்து மீண்டும் ஜோதிமணி மட்டும் தனியாக வீடு திரும்பிய நிலையில் க்ளாடிஸ் ராணியை காணவில்லை என அவரது பெற்றோர்களுடன் இணைந்து ஜோதிமணி பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனையடுத்து, மகளை காணவில்லை என்று சோழவந்தான் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் ஜோதிமணியிடம் விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதில், அவனியாபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு முட்புதருக்குள் வைத்து க்ளாடிஸ் ராணியிடம் நீ கர்ப்பமாகியதற்கு நான் தான் காரணம் என பொய் சொல்லி என்னை கட்டாய திருமணம் செய்தது ஏன் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். வாக்குவாதம்  முற்றவே ஆத்திரத்தில் ராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, ஜோதிமணியை போலீசார் கைது செய்தனர். திருமணமான 5 நாட்களில் காதல் மனைவியை கணவரே எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!