ஆசிரியரால் கற்பழிக்கப்பட்டு கர்ப்பமான +2 மாணவி... மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதி!!

Published : Jul 13, 2019, 05:12 PM IST
ஆசிரியரால் கற்பழிக்கப்பட்டு கர்ப்பமான +2 மாணவி...  மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதி!!

சுருக்கம்

சேலத்தில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த  அரசு பள்ளி உதவி தலைமையாசிரியரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கர்ப்பமான மாணவியை அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சேலத்தில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த  அரசு பள்ளி உதவி தலைமையாசிரியரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கர்ப்பமான மாணவியை அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,500-க்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில், அரசு பெண்கள் விடுதியும் உள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கியுள்ளனர். பள்ளியில், வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவர் பாலாஜி உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்துள்ளார். மாற்றுத்திறனாளியான அவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன. 

கடந்த ஆண்டு, பிளஸ் 2 முடித்த மாணவி ஒருவரின் பெற்றோர், சமீபத்தில், தலைமை ஆசிரியரை சந்தித்து, புகார் ஒன்றை தெரிவித்தனர். அதில், பிப்ரவரியில், பாலாஜி, வேதியியல் ஆய்வகத்தில், மாணவியை பலாத்காரம் செய்துள்ளான். இதனால், மாணவி தற்போது, கர்ப்பமாக இருப்பதாக பெற்றோர் கூறினர். இதனையடுத்து, உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பாலாஜி மருத்துவ விடுப்பில் செல்வதாக கூறி தலைமறைவானார். 

இதையடுத்து, தலைமை ஆசிரியர் அமுதா காவல் நிலையில் புகார் அளித்தார். அதனடிப்படையில், பாலியல் குற்றங்களில் இருந்து, சிறார்களை பாதுகாக்கும், போக்சோ சட்டத்தில், வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து, தலைமறைவாக இருந்த ரமேஷை கைது செய்து விசாரணைக்குப்பின் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மாணவியின் கர்ப்பத்தை கலைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தார். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தற்போது கருவை கலைத்தால் மாணவியின் உயிருக்கு ஆபத்தாகும் என்பதால், கர்ப்பத்தை கலைப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்