காதலியை மயக்கமாக்கி கற்பழித்த இளைஞன்... மறைந்து நின்று வீடியோ எடுத்த அம்மா, அக்கா!!

By sathish kFirst Published Sep 21, 2019, 1:51 PM IST
Highlights

இளம் பெண்ணை பலாத்காரம் செய்தது மகன்.. இதனை மறைந்து நின்று வீடியோ எடுத்தது பெற்ற தாய்.. இந்த கன்றாவி சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.

இளம் பெண்ணை பலாத்காரம் செய்தது மகன், இதனை மறைந்து நின்று வீடியோ எடுத்தது பெற்ற தாய்.. இந்த கன்றாவி சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.

மஞ்சரி என்ற இளம் பெண் கல்லூரியில் படித்து வருகிறார், இந்த என் மீது ப்ரேமத் என்ற இளைஞன் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். எங்கு சென்றாலும் கூடவே சென்ற தொடர்ந்து தனது காதலை சொல்லி வந்துள்ளார்.  

ஒரு கட்டத்தில் அந்த இளைஞன் மீதும் காதல் வர, ஒருநாள் அந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார், அந்த பெண்ணும் தனது காதலன் தானே என நம்பி கூடவே சென்றுள்ளார். வீட்டுக்கு வந்த பெண்ணை பார்த்ததும் இளைஞனின் அம்மா கட்டி அணைத்து, முத்தமிட்டு தனது பாசத்தை பொழிந்திருக்கிறார். பெண்ணை உள்ளே அழைத்து சென்ற அந்த இலைகனின் தாய், உட்கார வைத்து, முதல்முறையா வீட்டுக்கு வந்ததால் ஸ்வீட் சாப்பிட என்று சொல்லி கொடுத்துள்ளார். அந்த இளம் பெண்ணும் அதில் மயக்க மருந்து கலந்து கொடுத்த ஸ்வீட்டை வாங்கி சாப்பிட, கொஞ்ச நேரத்தில் மயங்கி விழ, உள்ளே இருக்குஅறைக்கு தூக்கி சென்ற அந்த இளைஞன், அந்த பெண்ணை நிர்வாணமாக்கி கற்பழித்துள்ளார்.

இந்த கண்றாவியை அவனது அம்மா  மற்றும் அவனது அக்கா வீடியோ எடுத்துள்ளார். கொஞ்ச நேரம் கழித்து, மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தால் இளைஞனின் அக்காவும், அக்கா வீட்டுக்காரரும் நின்று கொண்டிருக்கிறார்கள். பிறகு அந்த வீடியோ பெண்ணிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வெளியில் வீடியோ விஷயம் தெரிந்தால் குடும்ப மானமும், தன் மானமும் போய்விடும் என்று நினைத்து பயந்து வீட்டுக்கு ஓடியுள்ளார். வீட்டிலிருந்த  4 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு போய் அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார்.

வீட்டில் வைத்திருந்த பணம் எங்கே என்று மகளிடம் தந்தை கேட்கவும் நடந்த சம்பவத்தை கதறி கொண்டே சொல்லி இருக்கிறார். இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த தந்தை போலீசில் இது குறித்து புகார் தந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தாயையும்-மகனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  

click me!