ஆசைவார்த்தை கூறி பலாத்காரம்.. 7-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை.. வாலிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்.!

Published : May 21, 2022, 10:53 AM IST
ஆசைவார்த்தை கூறி பலாத்காரம்.. 7-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை.. வாலிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்.!

சுருக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் ஆம்பூரில் உள்ள ஒரு அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். 

ஆம்பூர் அருகே 7-ம் வகுப்பு மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் அந்த வாலிபரை கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் ஆம்பூரில் உள்ள ஒரு அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். 

இதனால் கடந்த மாதம் 5-ம் தேதி வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 

இந்நிலையில், மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மருத்துவமனை சார்பில் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சீனு என்கிற சீனிவாசன் (23) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!