இவர்களது காதலுக்கு மீனாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை மீறி, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இதனால் மீனாவின் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.
காதல், கலப்பு திருமணம் செய்து கொண்ட புதுமாப்பிள்ளையை ஓட ஓட விரட்டி சென்று படுகொலை செய்த சம்பவத்தில் மனைவியின் சகோதரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சூளகிரி ஏனுசோனை அடுத்த பி.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் சுந்தரேசன் மகன் சந்தோஷ்(23). நல்லாரப்பள்ளியில் உள்ள இரும்பு கம்பெனியில் வேலை செய்து வந்தார். மீனா என்ற மாற்று சமுதாய பெண்ணை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சாலையில் சந்தோஷ் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த மர்ம நபர்கள் ஓட, ஓட விரட்டி சென்று சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக, மீனாவின் அண்ணன் முருகேஷ்(25), அவரது நண்பர்கள் குமார்(24) மற்றும் 18 வயதுடைய ஒருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த மீனாவும், சந்தோசும் காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு மீனாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை மீறி, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இதனால் மீனாவின் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர். தங்கை வீட்டை விட்டு ஓடிப்போய், வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால், அவமானம் அடைந்த முருகேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க;- ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சரின் மகன் மீது பலாத்கார புகார்.. ரூம் போட்டு நாசம் செய்ததாக இளம்பெண் கதறல்.!