மீண்டும் செல்போன் டவர் காணவில்லை! காரைக்குடியில் திருடர்கள் தொடர் அட்டூழியம்

Published : Apr 03, 2023, 08:18 AM ISTUpdated : Apr 03, 2023, 08:25 AM IST
மீண்டும் செல்போன் டவர் காணவில்லை! காரைக்குடியில் திருடர்கள் தொடர் அட்டூழியம்

சுருக்கம்

2017ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட செல்போன் கோபுரத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முனைந்தபோது டவர் மாயமானது தெரிந்தது.

காரைக்குடியில் பயன்பாட்டில் இல்லாத செல்போன் கோபுரத்தைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று காரைக்குடி புதுச்சந்தைப்பேட்டை தெற்கு பகுதியில் இருந்தது. அந்த டவர் ஏர்டெல் நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்த செல்போன் கோபுரம் பயன்பாட்டில் இல்லை என்று சொல்லப்படுகிறது.

வைர வியாபாரி போல நாடகமாடி ஒரு கோடி ரூபாய் வைரங்களைக் கொள்ளையடித்த 2 பேர் கைது

இந்நிலையில் செல்போன் கோபுர நிறுவனம் அதிகாரிகள் தாஜ்மல்ஹான், மேலாளர் சுரேஷ், டெக்னீசியன் கணேஷ் பிரபு ஆகியோர் டவரை ஆய்வு செய்யச் சென்றனர். அப்போது செல்போன் கோபுரம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக, இதுகுறித்து காரைக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனை விசாரித்த நீதிபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவுப்படி காரைக்குடி தெற்கு பகுதி காவல்துறையினர் செல்போன் கோபுரம் மாயமானது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே முத்துப்பட்டணம் பகுதியில் 2006 முதல் இயங்கிவந்த செல்போன் டவரும், கம்பன் அருணாச்சலம் தெருவில் 2003 முதல் இயங்கிவந்த செல்போன் டவரும் காணாமல் போயின. இவை பற்றி கடந்த பிப்ரவரி மாதம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்குகளை காரைக்குடி வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிபிஐ வைர விழா: இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்! புதிய அலுவலகங்கள், ட்விட்டர் பக்கம் திறப்பு!

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!