காதலியுடன் தொடர்பு.. நண்பனின் அந்தரங்க உறுப்புகளை வெட்டி வீசிய நண்பன் - பரபரப்பு சம்பவம்

By Raghupati RFirst Published Nov 9, 2022, 8:53 PM IST
Highlights

21 வயது ஓட்டல் உரிமையாளரின் அந்தரங்க உறுப்புகளை அறுத்து, 9 முறை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை அருகே உள்ள பிவாண்டியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 21 வயதான ஓட்டல் உரிமையாளர் ஒன்பது முறை கத்தியால் குத்தி, அந்தரங்க உறுப்பை அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இறந்தவர் ஷமிம் அன்சாரி என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் அஸ்லாம் அன்சாரி என்றும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இருவரும் சிறுவயது நண்பர்களாக இருந்ததால் தினமும் சந்தித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையின் கூறியதாவது, ஷமிமுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட தோழிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் ஷமிமின் தோழிகளில் ஒருவரை காதலிக்கத் தொடங்கினார்.

இதையும் படிங்க..மின் கட்டணத்தை 10% குறைத்த தமிழக அரசு.. யாருக்கு, எவ்வளவு தெரியுமா ? முழு விபரம்

பின்னர் அவர் அவரிடம் விசுவாசமாக இருங்கள் அல்லது அவளுக்கு விருப்பமில்லை என்றால் அவரை விட்டுவிடுங்கள் என்று அவரிடம் கேட்டுள்ளார். இருப்பினும், ஷமிம் அவளை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் ஷமியின் அந்தரங்க உறுப்பை வெட்டிவிடுவேன் என்று அஸ்லாம் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க..தேர்வில் காப்பி.! கண்டித்த ஆசிரியர்.! 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த 10ம் வகுப்பு மாணவன் !

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் இறந்தவரின் ஹோட்டலில் பார்ட்டியில் இருந்தபோது, ​​தோழிகள் பற்றி பேசும் போது தகராறு ஏற்பட, இருவரும் அடித்துக்கொண்டனர். பிறகு ஒன்பது முறை கத்தியால் குத்தி, அந்தரங்க உறுப்பை அறுத்துள்ளார் அஸ்லாம். பிறகு வெட்டப்பட்ட அந்தரங்க உறுப்புகளை வெட்டி இறந்தவரின் வாயில் திணித்தார் என்றும்,  பிறகு தப்பியோடினார் என்றும் போலீசார் கூறுகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..நவம்பர் 11.! பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில் - 2024 கூட்டணிக்கு அடித்தளமா.?

click me!