காதலுக்கு கடும் எதிர்ப்பு ! துப்பட்டாவால் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை !!

By Selvanayagam PFirst Published May 8, 2019, 8:14 AM IST
Highlights

திட்டக்குடி அருகே காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் காதலர்கள் இருவரும் துப்பாட்டாவால் சேர்த்துக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை கொண்டனர்

கடலூர் மாவட்டடம் திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சிவரஞ்சன் கீழகல்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார்.

கீழகல்பூண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அபிராமி இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்த போது சிவரஞ்சனுக்கும், அபிராமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் இருவரும் பொதுத்தேர்வு எழுதி முடித்ததும் விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தனர். இருப்பினும் பல நேரங்களில் சிவரஞ்சனும், அபிராமியும் பொது இடங்களில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த வர்களின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துடன் சிவரஞ்சனையும், அபிராமியையும் சந்திக்க விடாமல் தடுத்து வந்தனர்.

இதை மீறி சிவரஞ்சனும், அபிராமியும் வீட்டை விட்டு வெளியேறி தொழுதூரை சேர்ந்த வேந்தன் என்பவரது விளை நிலத்துக்கு சென்று தனிமையில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரவில் அங்கு வந்த வேந்தன், அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டார். 

இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.ஆனால் காதல் ஜோடி வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அவர்கள் 2 பேரையும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை. இது பற்றி தகவல் அறிந்த வேந்தன் தனது நிலத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அவரது கிணற்றின் அருகில் 2 ஜோடி செருப்புகள் கிடந்தன.

உடனே அவர் போலீசாருக்கும், சிவரஞ்சன், அபிராமி ஆகியோரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது சிவரஞ்சனும், அபிராமியும் துப்பட்டாவால் உடலை சுற்றி கட்டிய நிலையில் நீரில் மூழ்கிக் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!