எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டியா? லோடு மேன் தலையில் கல்லை போட்டு கொன்ற மைத்துனருக்கு வலை வீச்சு

By Velmurugan sFirst Published Oct 12, 2023, 6:07 PM IST
Highlights

சிவகாசி அருகே குடும்ப தகராறில் சுமை தூக்கும் தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 33). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரியா (29) என்ற பெண்ணிற்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு அய்யனார் (7), பவித்ரா (4 ) என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். மாரிச்செல்வம் சிவகாசி பகுதியில் உள்ள லாரிசெட்டுகளில் சுமை தூக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். 

மாரி செல்வத்திற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மது அருந்திவிட்டு குழந்தைகளையும் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து கவலை அடைந்த மனைவி பிரியா, தனது சகோதரர் மகேந்திரனிடம் கூறி அழுதுள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாரிச்செல்வத்தை மகேந்திரன் (33) நேரில் சென்று எச்சரித்துள்ளார்.

நெடுஞ்சாலை உணவகங்களுக்கான டெண்டரில் முறைகேடு; அமைச்சர் சிவசங்கர் மீது சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் நேற்று மாலை மாரிச்செல்வம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அம்மிக்கல்லை தூக்கி போட்டு மகேந்திரன் படுகொலை செய்ததாகக் கூறப்படுகின்றது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை சிவகாசி டிஎஸ்பி தனஞ்ஜெயன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை தேடி வருகின்றனர்.

click me!