ஷாக்கிங் நியூஸ்.. எல்கேஜி படிக்கும் சிறுமி பாலியல் வன்கொடுமை.. வேன் உதவியாளரை போச்சோவில் தூக்கிய போலீஸ்.!

By vinoth kumarFirst Published Oct 1, 2022, 12:57 PM IST
Highlights

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பாலியல் குற்றங்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடுமையான சட்டங்கள் கொண்டு வந்த போதிலும் பாலியல் குற்ற சம்பவங்கள் கொஞ்சம் கூட குறையவில்லை.

சென்னை ராயப்பேட்டையில் எல்கேஜி படிக்கும் பெண் குழந்தையிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக வேன் உதவியாளர் சத்யராஜ் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பாலியல் குற்றங்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடுமையான சட்டங்கள் கொண்டு வந்த போதிலும் பாலியல் குற்ற சம்பவங்கள் கொஞ்சம் கூட குறையவில்லை. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் எல்கேஜி படிக்கும் சிறுமியிடம் வேன் உதவியாளர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த சிறுமி நடந்தவற்றை பெற்றோர்களிடம் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- கணவரை கழற்றிவிட்ட உஷாவை உஷார் செய்த கள்ளக்காதலர்கள்! உல்லாசத்திற்கு போட்டா போட்டி! இறுதியில் நடந்த அதிர்ச்சி

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த  புகாரின் அடிப்படையில் பள்ளி வேன் உதவியாளர் சத்யராஜ் என்பவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

இதையும் படிங்க;- பணத்தை திருப்பிக் கேட்ட அதிமுக பிரமுகர்! ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த நிதி நிறுவன பெண் ஏஜெண்ட்!விசாரணையில் பகீர்

click me!