யூடியூப் பார்த்து கொள்ளை.. சிங்க முகமூடி முதல் ருத்ராட்சம் வரை.. ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை குறித்து பகீர்..

Published : Dec 22, 2021, 07:23 PM ISTUpdated : Dec 22, 2021, 07:25 PM IST
யூடியூப் பார்த்து கொள்ளை.. சிங்க முகமூடி முதல் ருத்ராட்சம் வரை.. ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை குறித்து பகீர்..

சுருக்கம்

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை கொள்ளை சம்பவத்தில் சத்தமில்லாமல் சுவற்றில் துளையிடுவது எப்படி என்று‌ யூடியூப் பார்த்துவிட்டு திருட வந்ததாகவும், பத்து நாட்கள் பொறுமையாக கொள்ளையை அரங்கேற்றினர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 15 ஆம் தேதி இரவு, கடையின் பின்பக்க சுவற்றை துளையிட்டு, கொள்ளை சம்பவம் நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஐந்து தளங்களுடன் இயங்கி வரும் நகை கடையில் சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஷ் கண்ணன், வேலூர் சரக டிஜஜி ஏ.ஜி பாபு ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கொள்ளையன், நகைக் கடைக்கு உள்ளே பொருந்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களில் ஸ்பிரே அடித்து திருட்டில் ஈடுப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் பின்பக்க சுவர் துளை அருகில் ஒரு விக்கும் போலீசாரால் கண்டெக்கப்பட்டது. மேலும் கொள்ளையன் சிங்க முகமூடி அணிந்து, கையில் ஸ்ப்ரே பாட்டிலுடன் திரியும் சிசிடிவி காட்சி ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. இந்த ஒல்லியான தேகம் ,நடுத்தர வயது என்று சிசிடிவி காட்சி அடிப்படையில் கணிக்கப்பட்டு தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டது. 

இந்நிலையில் குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான டீக்காராமன் என்பவர் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. அவரை டிசம்பர் 20ஆம் தேதி பிற்பகல் ஒடுகத்தூர் அருகே காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் செய்த விசாரணையில் ஒடுகத்தூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் கொள்ளையடித்த நகைகளை புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் அவனிடமிருந்து நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளையும் வேலூர் மாவட்ட காவல்துறை மீட்டனர்.

இந்த நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைதானது எப்படி‌ என்பது குறித்து வேலூர் சரக டிஜஜி ஏ.ஜி. பாபு செய்தியாளரிடம் கூறினார். "வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை செய்து ஐந்து நாட்களிலேயே குற்றவாளியைக் கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைர நகைகளை குற்றவாளியிடம் இருந்து மீட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி மீது குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியதற்கான இரண்டு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளதாக கூறினார்.

இதனிடையே நகைக்கடையில் திருடர்களை குறித்து எச்சரிக்கும் அலாரம் இருந்தும் அது வேலை செய்யவில்லை. மற்றொரு பெரிய பிழை சிசிடிவி கேமரா வெறும் கடையினுள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்ததே தவிர கடையின் பின்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்படவில்லை. இதனைச் சாதகமாக பயன்படுத்தி எளிதில் பின் வழியாக குற்றவாளி உள்ளே நுழைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கட்டட தொழிலாளியாக பணியாற்றி வரும் இவர் 10 நாட்கள் திட்டமிட்டு மெல்ல துளையிட்டுள்ளார். 

ஒவ்வொரு இரவும் வந்து பொறுமையாக துளையிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இரண்டு காவலாளிகள் காவல் பணியில் இருந்தும் அவர்கள் பின் பகுதிக்குச் சென்று பார்ப்பதில்லை. இதனால் அந்த துளை அவர்கள் கண்களுக்கு படவில்லை," என்று வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் ஏ.ஜி. பாபு கூறினார். மேலும் 'சப்தமின்றி துளையிடுவது எப்படி' என்றும், இதற்கு முன் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் என்ன தவறு நிகழ்ந்துள்ளது என்பது பற்றியும் ஆராய்ந்து அந்த தவறுகள் கொள்ளையடிக்கும் போது நிகழாத வண்ணம் இருப்பதற்காக 'யூடியூபில்' உள்ள காணொளிகளைப் பார்த்து கற்றுக்கொண்டதா குற்றவாளி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒரு சிவ பக்தர் என்பதால் அவர் கொள்ளையடித்தவற்றில் ருத்ராட்ச மாலையை மட்டும் அவர் தன்னிடம் வைத்துக்கொண்டிருந்ததாக கூறிய காவல்துறையினர், மற்ற நகைகளை சுடுக்காட்டில் புதைத்து வைத்திருந்தார் என்வும் முதலில் கிடைத்த இந்த ருத்திராட்ச மாலையின் மூலமாகவே இந்த குற்றவாளியை பிடித்தோம் எனவும் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி