அதாவது மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு அருகில் பிம்பிரி சிஞ்சீவ் வாட்டில் உள்ள சாகன் காவல்நிலையத்தில் வினோத வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது. சுமார் 31 வயது நிறைந்த பெண் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக ஒரு மந்திரவாதி முன்னிலையில் மனைவியை நிர்வாணப்படுத்தி சாம்பல் பூசி பூஜை நடத்திய கணவனையும், மாமியாரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புனேவில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளபோதும், பழமைவாதமும், மூடநம்பிக்கையும் இன்னும் நம் சமூகத்தில் புரையோடிக்கிடக்கிறது. சில நேரங்களில் இந்த மூட நம்பிக்கைகள் பலரின் வாழ்க்கைக்கு அஸ்தமனம் எழுதும் துரதிர்ஷ்டம் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஒரு குடும்பம் ஆண் குழந்தை வேண்டி தனது மருமகளை சூனியத்தில் ஈடுபடுத்தியதுடான் கணவரும், மாமியாரும் சேர்ந்து அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி உடல் முழுக்க சாம்பல் பூசி கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அதாவது மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு அருகில் பிம்பிரி சிஞ்சீவ் வாட்டில் உள்ள சாகன் காவல்நிலையத்தில் வினோத வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது. சுமார் 31 வயது நிறைந்த பெண் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன, அதில், ஒரு பெண்ணுக்கும் அவரின் கணவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் மூலம் அந்த பெண்ணுக்கு இரண்டு பெண்குழந்தைகள் பிறந்ததாகவும் ஆனால் அந்த பெண்ணுக்கு (ஆண் குழந்தை) ஆண் வாரிசு இல்லாததால் தனது கணவனும் மாமியாரும் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி வந்ததும், அந்த பெண்ணை எப்படியாவது அவளின் தாய் வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்பதற்காக பலமுறை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து, அந்த பெண்ணை, கணவனும், மாமியாரும் துன்புறுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், ஒரு கட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள ஒரு மந்திரவாதியிடம் அந்த பெண்ணை அழைத்துச் சென்ற கணவனும், மாமியாரும் தன்னை நிர்வாணப்படுத்தி மந்திரவாதி முன்னிலையில் நிற்க வைத்ததுடன், அவளின் உடல் முழுக்க சாம்பல், குங்குமம், மஞ்சள் பூசி அமானுஷ்ய பூஜையில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அந்தகார பூஜையில் ஈடுபடுத்தி கணவனும், மாமியாரும் துன்புறுத்தியதுடன், அந்த பெண்ணின் சம்மதம் இன்றி கணவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் மாந்திரீகத்தில் ஈடுபடுத்த மருமகளை துன்புறுத்திய கணவன் மற்றும் மாமியார் மீது IPC பிரிவு 354, 498 (a), 323, 504, 506, 34, 3, 35 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கூடுதலாக, மகாராஷ்டிராவில் உள்ள நரபலி ஒழிப்பு தடுப்பு பிரிவு 3 இன் கீழ், தீய மற்றும் அகோரி நடைமுறைகள், மந்திர மாந்திரீக தடுப்பு சட்டம் -2013 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.