தூங்கிக் கொண்டிருந்த 8 மாத கர்பிணி. துடிக்க துடிக்க பெட்ரோல் உற்றி எரித்த சைகோ காதலன். அதற்கு மறுத்ததால் வெறி.

By Ezhilarasan BabuFirst Published Sep 1, 2021, 12:28 PM IST
Highlights

ஹரியானாவில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல், இவரை  பிரகதி என்ற பெண் சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் காதலியை காதலன் பெட்ரோல் ஊற்றி  எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் 90 சதவீத காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் உயிரிழந்ததையடுத்து அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ஹரியானாவில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல், இவரை  பிரகதி என்ற பெண் சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களாக ராகுலின் வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக தங்கி வசித்து வருகின்றனர். 

ராகுல்  பிரகதிக்கு தாலி கட்டவில்லை, ஆனால் அவர்கள் உடல் ரீதியாக உறவில் இருந்து வந்தனர். இடையில் பிரகதி கர்ப்பமானார், இதை சிறிதும் எதிர்பாரக்காத ராகுல் மற்றும் அவரது தாயார் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ராகுல் மற்றும் அவரது தாயார், கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என பிரகதியிடம் வலியுறுத்தினர். ஆனால் பிரகதி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ராகுல் மற்றும் அவரது தாயார், இருவரும்  பிரகதியிடம் மோசமான வார்த்தைகளால் பேசி அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். ராகுலும் அவரது தாயும், குழந்தையை பெற்றெடுத்தால் இருவரையும் கொலை செய்து விடுவோம் என தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். ஆனால் பிரகதி இரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிரகதி கர்ப்பமாகும் வரை உருகி உருகி காதலித்து வந்த ராகுல் தாயுடன் சேர்ந்துகொண்டு பிரதியை ஒரு கட்டத்தில் மோசமாக கொடுமைப்படுத்த தொடங்கினார். 

இந்நிலையில் பிரகதி 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவள் தூங்கிக் கொண்டிருந்தபோது நேற்று அதிகாலை 1 மணி அளவில் ராகுல் அவர் மீது பெட்ரோல்  ஊற்றி தீ வைத்தார். வீடு முழுவதும் தீ பரவியது, பிரகதி உடலில் தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், கொடுமை தாங்க முடியாமல் பிரகதி அலறியபடி அங்கும் இங்கும் ஓடினார். அதிகாலையில் பெண் அலறல் சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது 90 சதவீத தீக்காயங்களுடன் பிரகதி கரி கட்டையாக மயங்கி கிடந்தார். பொது மக்கள் மீட்டு அவரை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ராகுலுக்கு 30% தீக்காயம் ஏற்பட்டது. இந்த தீக்காயம் கேஸ் லீக்கேஜ் ஆக பெட்ரோலில் தீபரவி விபத்து ஏற்பட்டது என்றும், தான் பெட்ரோல் ஊற்றி எரிக்கவில்லை என்றும் ராகுல் கூறினார். உண்மையில் என்ன நடந்தது என்று பிரகதியிடம் வாக்குமூலம் பெற போலீசார் முயற்சி செய்தனர். ஆனால் அவர் கடுமையான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் வாய் திறந்து பேச முடியவில்லை.

இந்நிலையில் பிரகதி உயிரிழந்ததால், இது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. போலீசாரின் கூற்றுப்படி, கருக்கலைப்பு செய்ய வேண்டுமென ராகுலுக்கும் பிரகதி க்கும் இடையே நள்ளிரவில் கைகலப்பு ஏற்பட்டு இருக்கலாம், அப்போது  திட்டமிட்டபடி ராகுல் பிரகதியை பெட்ரோல் ஊற்றி எரித்து இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதில் ராகுல்  மற்றும் அவரது தாயார் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இருவரிடமும்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

உயிருக்குயிராய் காதலித்த பெண்ணின் மீது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்தும் கூட காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது பெருந்துயர் என்னவென்றால். 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது, இயற்கை பிரசவத்தின் மூலம் குழந்தை பிறந்தது, ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை இறந்துவிட்டதுதான்.   இச்சம்பவம் குறித்து பலரும் தங்களது துயரத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

click me!