எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலியுடன் உல்லாசம்.. கடுப்பில் கணவனை போட்டு தள்ளிய மனைவி..எப்படி தெரியுமா?

Published : Mar 07, 2022, 12:33 PM IST
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலியுடன் உல்லாசம்.. கடுப்பில் கணவனை போட்டு தள்ளிய மனைவி..எப்படி தெரியுமா?

சுருக்கம்

கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி (55) தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (50). இவர்களுக்கு ராஜ்குமார், சதீஷ் என 2 மகன்கள் உள்ளனர். அதில், ராஜ்குமாருக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், நாராயணசாமிக்கும் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவரை கத்தியால் சரமாரியாக குத்தி மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி (55) தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (50). இவர்களுக்கு ராஜ்குமார், சதீஷ் என 2 மகன்கள் உள்ளனர். அதில், ராஜ்குமாருக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், நாராயணசாமிக்கும் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இந்த விவகாரம் நாளடைவில் மனைவிக்கு தெரியவந்தது. இதனால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கள்ளக்காதலை கைவிடுமாறு கணவரிடம் மனைவி ராஜேஸ்வரி கூறியுள்ளார். ஆனால், இதை கணவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை. 

இந்நிலையில், மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த நாராயணசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், கணவரை கொலை செய்ததாக ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நாராயணசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!