இரண்டு முறை கள்ளக்காதலனுடன் எஸ்கேப்பான மனைவி.. 3வது முறையாக என்ன நடந்தது தெரியுமா?

By vinoth kumarFirst Published Aug 30, 2022, 8:18 AM IST
Highlights

என்னுடைய மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அமுதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவனைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் 2 முறை சென்று வாழ்ந்த பெண், மீண்டும் 3வது முறை சென்ற நிலையில் தூக்கில் தொங்கி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி அமுதா (30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த  ஜோதீஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரிய வந்ததையடுத்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், மனைவி இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.

இதையும் படிங்க;- இளம்பெண்ணுக்கு அந்த இடத்தில் கை வைத்து டார்ச்சர்.. வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்றுவிடுவேன்! டாக்டர் மிரட்டல்

கடந்த 2 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு அமுதா தனது கள்ளக்காதலன் ஜோதீஸ்வரனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒரு வழியாக மனைவி அமுதா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து 20 நாட்களுக்குப் பிறகு அழைத்துவந்து பாபுவிடம் சமாதானம் பேசி வீட்டில் விட்டுச் சென்றனர். இந்நிலையில், மீண்டும் அதேபோல் ஜோதீஸ்வரன் என்பவருடன் வீட்டைவிட்டு சென்றவரை அடுத்த நாளே மீண்டும் அழைத்து வந்துள்ளனர். 

அதனைத்தொடர்ந்து 3-வது முறையாக கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஜோதீஸ்வரன் என்பவருடன் சென்றவர் எங்கு சென்றார் என்பது தெரியாமல் பாபு தேடி அலைந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 3-வது முறையாக அமுதா ஓட்டம் பிடித்தபோது பாபுவுக்கு அவரது நண்பர் ஒருவர் மூலம் இருக்கும் இடம் தெரிந்துள்ளது.  அப்போது பாபு, மனைவி அமுதாவை சந்தித்து பேசியபோது, கள்ளக்காதலன் ஜோதீஸ்வரன் தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்து கதறி அழுத படி அங்கிருந்து சென்றுள்ளார். 

இந்நிலையில், திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம் கம்பர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அழுதா உடல் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக அவரது நண்பர் பாபுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில் தனது மனைவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கணவர் பாபு தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அமுதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அமுதாவுடன் தங்கியிருந்த ஜோதீஸ்வரனை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடந்து வந்த விபச்சாரம்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா? கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு

click me!