அக்காவுடன் தனிகுடித்தனம்.. உல்லாசம்... ஜாலியாக இருந்தவரை ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கொடூரமாக கொன்ற தம்பி..!

By vinoth kumarFirst Published Aug 4, 2021, 7:05 PM IST
Highlights

ஷீலாவின் தம்பி  ராஜிவ் (25), அவரது நண்பர் உதயகுமார் (25) ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஷீலா வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த கனகராஜை சரமாரியாக தாக்கி, பீர் பாட்டிலால் குத்தி, தலையில் அம்மிக்கல்லை போட்டு படுகொலை செய்தனர். 

கள்ளக்காதல் விவகாரத்தில் கனகராஜின் கழுத்து, வயிறு பகுதியில் சரமாரியாக குத்தி வீட்டில் இருந்த அம்மிகல்லை எடுத்து அவரது  தலையில் போட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அடுத்த சின்ன ஐயங்குளம், காமாட்சி நகரை சேர்ந்தவர் வரதன் (40). இவரது மனைவி ஷீலா (33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கனகராஜ் (46).  காஞ்சிபுரத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, அரிசி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகள் முன் கனகராஜுக்கும், ஷீலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததையடுத்து மனைவி ஷீலாவை கண்டித்துள்ளார். ஆனாலும், இவர்களது கள்ளக்காதல் நீடித்தது. இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஷீலா, கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தேனம்பாக்கத்தில் உள்ள கனகராஜுடன் வசித்து வந்துதார்.

இந்நிலையில்,  ஷீலாவின் தம்பி  ராஜிவ் (25), அவரது நண்பர் உதயகுமார் (25) ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஷீலா வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த கனகராஜை சரமாரியாக தாக்கி, பீர் பாட்டிலால் குத்தி, தலையில் அம்மிக்கல்லை போட்டு படுகொலை செய்தனர். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்த ஷீலா அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள், 2 பேர் தப்பிவிட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்தனர். அதில், ஷூலாவை தம்பி ராஜிவ் கள்ளக்காதலை கைவிடுமாறு பல முறை கண்டித்தும் கைவிடாததால் கனகராஜை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அதே பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜிவ், உதயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

click me!