உல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவர்.. கூலிப்படையை வைத்து போட்டு தள்ள முயன்ற மனைவி.. திடுக்கிடும் தகவல்..!

By vinoth kumarFirst Published Jan 15, 2022, 8:06 AM IST
Highlights

தனது மனைவி சுடர்மதி, வழக்கறிஞர் ராஜேசுடன் கள்ளத்தொடர்பில் உள்ளார். இதை நான் கண்டித்ததால் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனது மனைவி தூண்டுதலின் பேரில், வழக்கறிஞர் ராஜேஷ் கூலிப்படை வைத்து என்னை வெட்டி கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் பெண்ணின் கணவரை கூலிப்படையை வைத்து போட்டு தள்ள முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (38). இவருக்கு சுடர்மதி என்ற மனைவியும், 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு புளியந்தோப்பு பேசின் பிரிட்ஜ் சாலை வழியாக  இருசகக்கர வாகனத்தில் சென்றபோது, பின் தொடர்ந்து வந்த 4 பேர் வந்துக்கொண்டிருந்தனர். நாள் நடநமாட்டம் இல்லாத நேரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் தினேஷ்குமாரை அந்த கும்பல் வழிமறித்து வெட்டினர். இதை  அவ்வழியாக வந்த ரோந்து போலீஸ் பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கு விரைந்தார். இதனால், அந்த 4 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டி சென்று, 2 பேரை மடக்கி பிடித்தார். மற்ற இருவர் தப்பினர். பிடிபட்ட 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரிக்கும் பாணியில் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, காயமடைந்து வலியால் துடித்துக்கொண்டிருந்த  தினேஷ்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பிடிப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியதில் பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், அயனாவரத்தை சேர்ந்த சஞ்சீவ்குமார் (25), பிரதீப் குமார் (28), தப்பி ஓடியவர்கள் அயனாவரத்தை சேர்ந்த அஸ்வின் (23), சூர்யா என்பதும் தெரியவந்தது. 

இதனையடுத்து இவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- சஞ்சீவ்குமாருக்கு வியாசர்பாடியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார். வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சீவ்குமாரை சமீபத்தில் சந்தித்த வழக்கறிஞர் ராஜேஷ், திருமங்கலம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவன், எனது தங்கைக்கு தொடர்ந்து தொல்லை செய்து வருகிறான். அவனை கொலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 

அதற்கு சஞ்சீவ்குமார் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சஞ்சீவ்குமாரை ராஜேஷ் ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார். சஞ்சீவ்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, சம்பவத்தன்று தினேஷ்குமாரை கொலை செய்வதற்கு வந்துள்ளார். அவர்களுடன் வந்த வழக்கறிஞர் ராஜேஷ், தினேஷ்குமாரை அடையாளம் காட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர், சஞ்சீவ்குமார் தனது கூட்டாளிகளுடன் தினேஷ்குமாரை வெட்டியபோது போலீசில் சிக்கினர்.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்த தினேஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தனது மனைவி சுடர்மதி, வழக்கறிஞர் ராஜேசுடன் கள்ளத்தொடர்பில் உள்ளார். இதை நான் கண்டித்ததால் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனது மனைவி தூண்டுதலின் பேரில், வழக்கறிஞர் ராஜேஷ் கூலிப்படை வைத்து என்னை வெட்டி கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது. கள்ளக்காதல் விவகாரத்தை மறைத்து தங்கை பிரச்னை எனக்கூறி, பெண்ணின் கணவரை கொல்ல கூலிப்படையை தயார் செய்த வழக்கறிஞர் ராஜேஷ் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

click me!