பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொடூர கொலை.. இளைஞருக்கு தூக்கு தண்டனை உறுதி..!

By vinoth kumarFirst Published Jan 12, 2022, 1:43 PM IST
Highlights

புதுக்கோட்டை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி சாமுவேல் என்பவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்துள்ளது. 

புதுக்கோட்டை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி சாமுவேல் என்பவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள ஏம்பல் கிராமத்தில் கடந்த ஜூன் 30ஆம் தேதி 7 வயது சிறுமி காணாமல் போனதாக அவருடைய பெற்றோர்கள் புகார் அளித்தனர். காவல்துறையினர் சிறுமியை தொடர்ந்து தேடிவந்த நிலையில், ஜூலை 1ஆம் தேதியன்று ஒரு முட்புதருக்குள் சிறுமி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மேலும் உடலில் பல காயங்கள் இருந்தது. இதனையடுத்து, பிரேத பரிசோதனை அறிக்கையில்  சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், குற்றவாளியான ராஜா(எ) சாமுவேல் கைதுசெய்யப்பட்டார். அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து தீர்ப்பு வெளியானது. அதில், குற்றவாளியின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து 3 பிரிவுகளில் மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா அதிரடி தீர்ப்பை வழங்கினார். அத்துடன் 6 மாதத்திற்குள் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்து உறுதி செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியலிங்கம் மற்றும் ஜெயச்சந்திரன் அமர்வு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பை ஏற்று, குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். 

click me!