கள்ளக்காதலுக்கு இடையூறு... தாலி கட்டிய கணவரின் கழுத்தை கரகரவென அறுத்து துடிக்க துடிக்க கொன்ற மனைவி..!

By vinoth kumarFirst Published Dec 13, 2020, 5:47 PM IST
Highlights

உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை மனைவியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை மனைவியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த சீங்கோட்டையை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் தனபால் (27). கட்டட மேஸ்திரி. இவருக்கும், அருள்சத்யா (20) என்பவருக்கும், ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் ஓசூர் பேகேப்பள்ளி எழில் நகர் பகுதியில், கணவன், மனைவி வசித்து வந்தனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை தனபால் தலையில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தனபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 விசாரணையில், அருள்சத்யா, ஊத்தங்கரை தாலுகா மோட்டூர் அருகே உள்ள பாப்பாரப்பட்டியை சேர்ந்த தனது கள்ளக்காதலனான லாரி டிரைவர் மணிகண்டன் (எ) சரவணன் (25) என்பவருடன் சேர்ந்து, தனபாலை கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அருள் சத்யா, மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கணவர் தனபாலை கொலை செய்தது குறித்து, அருள்சத்யா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனக்கும், மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.

இதையறிந்த எனது கணவர் என்னை கண்டித்தார். இதனால், எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. எனது உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதால், அவரை தீர்த்துக் கட்ட மணிகண்டனுடன் சேர்ந்து முடிவு செய்தேன். அதன்படி கடந்த 9ம் தேதி இரவு நானும், தனபாலும் தூங்க சென்றோம். எங்களது திட்டத்தின்படி, நள்ளிரவில் மணிகண்டன் எனது வீட்டிற்கு வந்தார். அப்போது, நானும், மணிகண்டனும் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த தனபாலின் தலையிலும், இடது காது அருகிலும் கத்தியால் வெட்டினோம். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துட்டார் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, கைதான 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

click me!