கட்டிலில் கட்டிப்புரண்டு கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்!இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

By vinoth kumarFirst Published Jan 6, 2023, 2:26 PM IST
Highlights

விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம். இவரது மனைவி ரூபா. பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அதே பட்டாசு ஆலையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த கருப்பசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

மனைவியுடன் கட்டிலில் தனிமையில் உல்லாசமாக வாலிபரை கணவர் கட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம். இவரது மனைவி ரூபா. பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அதே பட்டாசு ஆலையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த கருப்பசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்! அரைகுறை ஆடைகளில் 2 இளம்பெண்கள்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், நேற்று இரவு பாண்டிசெல்வம் வெளியே சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டிற்கு கருப்பசாமி வந்துள்ளார். அப்போது, ரூபாவும், கருப்புசாமியும் கட்டிலில் கட்டிப்புரண்டு உல்லாசமாக இருந்துள்ளனர். வெளியே சென்ற கணவர் வீட்டில் வந்து பார்த்த போது இருவரும் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டிசெல்வம், வீட்டில் இருந்த கட்டையால் கருப்பசாமியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனையடுத்து, பாண்டிசெல்வம் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கருப்பசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள பாண்டிசெல்வத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க;-  கோவிட் பணியின் போது பாலியல் பலாத்காரம்.. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை.!

click me!