தூத்துக்குடியில் பயங்கரம்.. தனிமையில் இருந்த கள்ளக்காதல் ஜோடி மீது ஆசிட் வீச்சு.. கணவர் வெறிச்செயல்..!

Published : Jun 27, 2021, 06:17 PM IST
தூத்துக்குடியில் பயங்கரம்.. தனிமையில் இருந்த கள்ளக்காதல் ஜோடி மீது ஆசிட் வீச்சு.. கணவர் வெறிச்செயல்..!

சுருக்கம்

தூத்துக்குடியில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அசோக் நகர் 8வது தெருவை சேர்ந்தவர் ரவி (50). இவர் அப்பகுதியில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி மாலா (45). பி.என்.டி. காலனி பகுதியை சேர்ந்தவர் சூசை(49). இவர் பணம் கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் மாலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. அதனை ரவி கண்டித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு அசோக் நகரில் சூசை ரவியின் வீட்டிற்கு வந்து மாலாவும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரவிக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த ரவி பேட்டரிக்கு ஊற்றும் ஆசிட்டை எடுத்து மாலா மற்றும் சூசை மீது ஊற்றினார். அப்போது தந்தையை பார்க்க வந்த சூசை மகன் கெபின் என்பவர் அதனை தடுக்க முயற்சித்தார். அவர் மீதும் ரவி ஆசிட்டை வீசினார். இதில், தந்தை மற்றும் மகனுக்கும் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, சூசை, கெபின் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையிலும், மாலா மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வரும் மாலா மற்றும் சூசை ஆகியோருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமைறைவாக உள்ள ரவியை போலீசார் தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தாய் தந்தையைக் கொன்று ரம்பத்தால் துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன்!
பேருந்தில் இவ்வளவு பேர் இருக்கும் போதே ஸ்ரீதர் செய்த வேலை.. கண்ட இடத்தில் கை வைத்ததால் பதறிய பள்ளி மாணவி