கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய மனைவி.. விசாரணையில் பகீர் தகவல்..!

By vinoth kumarFirst Published Sep 15, 2020, 5:47 PM IST
Highlights

கள்ளக்குறிச்சியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொடூரமாக கொன்று விட்டு நாடகாமாடிய மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொடூரமாக கொன்று விட்டு நாடகாமாடிய மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(40). லாரி ஓட்டுநர். இவருக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா(30) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாரனோடை கிராம சாலையில் நேற்று முன்தினம் ஆனந்தன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆனந்தனின் உடலை பரிசோதனை செய்த போது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விஷம் கலந்த மதுவை குடித்ததால் ஆனந்தன் இறந்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து குடும்ப பிரச்சனையால் ஆனந்தன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது மதுவில் விஷம் கலந்துகொடுத்து அவரை கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதனையடுத்து, மனைவியின் நடவடிக்கை போலீசார் ரகசியமாக நோட்டமிட்டு அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து சத்யா, தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-எனது கணவர் ஆனந்தன் பெங்களூருவில் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருவதால் அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று விடுவேன். அப்போது, சீனிவாசனுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம்.

இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததால் தன்னை கண்டித்தார். இதனால், இருவரும் மீண்டும் ஒன்று சேராமல் போய்விடுமோ என்பதால் சைநாக பேசி மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கூறியுள்ளார். உடனே சீனிவாசன், அங்கிருந்து சென்று விட்டார். நானும் ஒன்றும் தெரியாததுபோல் வீட்டில் இருந்துகொண்டேன். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நாங்கள் மாட்டிக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.

click me!