Latest Videos

நான் கூப்பிடும்போதெல்லாம் வரலைன்னா! ஃபாரின்ல இருக்குற புருஷன் கிட்ட சொல்லிடுவேன்! கள்ளக்காதலன் டார்ச்சர்!

By vinoth kumarFirst Published Jul 2, 2024, 4:57 PM IST
Highlights

இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த முகமது பிலால் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வெளிநாட்டில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

கணவர் வெளிநாட்டில் இருப்பதை அறிந்து இளம்பெண்ணை க்ரெக்ட் செய்து ஓயாமல் உல்லாசத்துக்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கோவை மாவட்டம்  உக்கடம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த முகமது பிலால் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வெளிநாட்டில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க: இதற்காக தான் கடலூர் அதிமுக பிரமுகரை ஒட ஒட விரட்டி கொன்றோம்! சென்னையில் கைதானவர்கள் பகீர் தகவல்!

நாளுக்கு நாள் இவரது தொல்லை அதிகரிக்கவே இவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் அவர் விடாமல் தன்னுடன் தொடர்ந்து உல்லாசமாக இருக்காவிட்டால், கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறிவிடுவதாக மிரட்டி வந்துள்ளார். இதனால் இளம்பெண்ணுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மனவேதனையில் இருந்து வந்தார்.

இதையும் படிங்க:  என்ன கழற்றிவிட்டு அவன் கூட போறியா? போட்டுக்கொடுத்த முதல் கள்ளக்காதலன்.. போட்டுத்தள்ளிய மகன்கள்!

இந்நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முகமது பிலால் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றார். இதனால் பொறுமை இழந்த இளம்பெண் வேறு வழியில்லாமல் உக்கடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

click me!